ஆன்மிகம்
ஆரோக்கியத்தில் அடிக்கடி தொல்லையை அனுபவிப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய தேவனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்யலாம்.
நவக்கிரகங்களில் ‘ராஜகிரகம்’ என்று வர்ணிக்கப்படுவது சூரியன். இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிரினங்களும் வாழ உறுதுணையாக இருப்பவர் சூரியன். அப்படிப்பட்ட சூரியனுக்கு உரிய கிழமையாகக் கருதப்படுவது ஞாயிற்றுக்கிழமையாகும். அன்று விடுமுறைநாள் என்பதால், எல்லோருமே அந்தக் கிழமையில் மகிழ்ச்சியாக இருப்பர்.
ஓய்வு பெற்றுக் கொள்ளும் அந்த நாளில் பிறந்தவர்கள், ஓய்வில்லாமல் உழைப்பவர்களாக விளங்குவர். சுற்றித் திரிவதிலும் பிரியம் கொண்டவர். அலைச்சலுக்கென்றே பிறந்தவர்கள் என்று கூடச் சொல்லலாம்.
ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெற்று விளங்குபவர்கள், அதாவது சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிறந்திருந்தால் பெற்றேர்களின் முன்னேற்றத்தில் பாதிப்புகள் ஏற்படலாம்.
எனவே, சூரியனுக்கு விரதமிருந்து பரிகாரம் செய்து கொள்வது நல்லது. ஐப்பசி மாதம் சூரியன் நீச்சம் பெறுகிறார். எனவே, அந்த மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள், ஆரோக்கியத்தில் அடிக்கடி தொல்லைகளைச் சந்திப்பர். அவர்களும் விரதமிருந்து பரிகாரம் செய்து கொள்வது நல்லது.
ஓய்வு பெற்றுக் கொள்ளும் அந்த நாளில் பிறந்தவர்கள், ஓய்வில்லாமல் உழைப்பவர்களாக விளங்குவர். சுற்றித் திரிவதிலும் பிரியம் கொண்டவர். அலைச்சலுக்கென்றே பிறந்தவர்கள் என்று கூடச் சொல்லலாம்.
ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெற்று விளங்குபவர்கள், அதாவது சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிறந்திருந்தால் பெற்றேர்களின் முன்னேற்றத்தில் பாதிப்புகள் ஏற்படலாம்.
எனவே, சூரியனுக்கு விரதமிருந்து பரிகாரம் செய்து கொள்வது நல்லது. ஐப்பசி மாதம் சூரியன் நீச்சம் பெறுகிறார். எனவே, அந்த மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள், ஆரோக்கியத்தில் அடிக்கடி தொல்லைகளைச் சந்திப்பர். அவர்களும் விரதமிருந்து பரிகாரம் செய்து கொள்வது நல்லது.