ஆன்மிகம்
செப்டம்பர் (புரட்டாசி) மாதங்களில் வரும் விரதங்களும் அதனை எப்படி அனுஷ்டிப்பது என்பதையும் பார்க்கலாம்.
புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறது. இந்த மாத பவுர்ணமியில் சிவன் கோவில்களில் சிவனுக்கு கோதுமையும் வெல்லமும் கலந்த அப்பத்தால் அபிஷேகம் செய்வார்கள். இந்த மாத பவுர்ணமி அன்று தான் உமா மகேஸ்வர விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
செப்டம்பர் - 17, 24, அக்டோபர் 1, 8, 15 புரட்டாசி சனிக்கிழமை : இம்மாதங்களில் வரும் சனிக்கிழமைகள் வெங்கடசப் பெருமானுக்கு உகந்த நாட்கள். இந்த சனிக்கிழமைகளில் விரதமிருந்து வெங்கடேசப் பெருமாளை வழிபாடு செய்து துளசி தீர்த்தம் அருந்தி, அதன் பின்னர் உணவு உட்கொள்வது சிறப்பைத் தரும். இந்த சனிக்கிழமைகளில் ஒருநாள் வெங்கடேசப் பெருமானுக்கு நிவேதனமாக புளியோதரை, பொங்கல், சர்க்கரைப் பொங்கல் முதலியவைகளை நிவேதித்து வழிபாடு செய்வது நல்லது.
செப்டம்பர் - 30 (வெள்ளி) மாகாளய அமாவாசை : பித்ருக்களின் இறந்த திதி தெரியாதவர்கள் இன்றையத்தினம் பிண்ட தர்ப்பணம் செய்தல் வேண்டும். இன்று ஒரு வேளை உணவுண்டு ஒரு வேளை உபவாசமிருப்பது சிறப்பு.