ஆன்மிகம்

ஏகாதசி விரதத்தின் பயன்கள்

Published On 2016-09-02 13:55 IST   |   Update On 2016-09-02 13:55:00 IST
ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதால் கிடைக்கும் பயன்கள் என்னவென்று பார்க்கலாம்.
விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் ஏகாதசி அன்று விரதம் இருத்தல் மிகச் சிறந்ததாகும்.

ஏகாதசியின் முழு நேரம் அறிந்து விரதம் இருந்தால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படும்.

சிறுகுடல் மற்றும் பெருங்குடல் சுத்தம் ஆகும். இரத்தம் தூய்மை பெறும். ஏகாதசி விரதம் பாவங்களை அழிக்கின்ற விரதமாகும்.
ஏகாதசி மாதம் இருமுறை வரும்.

1 வளர்பிறை ஏகாதசி,
2. தேய்பிறை ஏகாதசி

ஆகும்.

ஏகாதசி அன்று செடி, கொடி, மரம் இவைகள் அனைத்தும் தன் கழிவுகளை வெளியே அகற்றும். ஒரு மரத்தில் பறிக்கப்படும் கனியானது மற்ற நாளில் பறித்தால் ஒரு சுவையும், ஏகாதசி அன்று பறிக்கப்படும் போது ஒரு சுவையும் இருக்கும்.

எனவே ஏகாதசி விரதத்தால் மனம் தூய்மையாகும். உடல் கழிவுகளை அகற்றும். செய்த பாவங்களையும் அகற்றி நல்ல வாழ்க்கை அமையும்.

Similar News