ஆன்மிகம்
இந்த ஆண்டின் தமிழ்மாத பவுர்ணமி விரதங்கள்
2016-ம் ஆண்டின் தமிழ்மாத பவுர்ணமி விரதங்கள் என்னவென்று பார்க்கலாம். இந்த பன்னிரண்டு பவுர்ணமிகளுமே சிவபெருமானுக்குரிய விசேஷ நாட்களாகும்.
விஞ்ஞான ரீதியாக மட்டுமல்லாமல் ஆன்மீக ரீதியாகவும் பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய நாளாகும். எனவேதான் ஒவ்வொரு மாத பவுர்ணமியையும் ஒரு பண்டிகையாகக் கொண்டாடும்படி நம் முன்னோர்கள் விழாக்களை உருவாக்கி வைத்துள்ளார்கள். மாத மாதம் பவுர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும். அந்த நாட்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் பெரும்பாலும் அந்த நட்சத்திரத்தின் பெயரிலேயே வருவதைக் காணலாம். பன்னிரண்டு பவுர்ணமிகளுமே சிவபெருமானுக்குரிய விசேஷ நாட்களாகும்.
மாசி-மாசிமகம் :
மாசி மாதத்தில் பவுர்ணமி மகம் நட்சத்திரத்தில் வரும். சிவன் கோவில்களில் சிவனுக்குப் பசு நெய்யில் அபிஷேகம் செய்வார்கள். இந்த நாளை மாசி மகம் என்று கோவில்களில் இறைவனை புனித நீர் நிலைகளில் நீராடல் செய்து கொண்டாடுவார்கள். இந்த நாளில் கடற்கரையை ஒட்டியுள்ள கோவில்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். வீடுகளில் அன்று சித்ரான்னங்கள் பாயசம் முதலியன செய்து நிலவிற்கு படைத்து நிலவொளியில் குடும்பத்துடன் உண்டு மகிழ்வார்கள்.
பங்குனி-பங்குனி உத்திரம் :
பங்குனி மாதத்தில் பவுர்ணமி உத்திர நட்சத்திரத்தில் வரும். சிவன் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. கடவுள்களின் திருமண நாளாகவும் கொண்டாடப்படும். இந்த பவுர்ணமியன்று திருச்செந்தூர் கோவிலில் ஐராவத மண்டபத்தில் 108 சிவலிங்கங்கள் சாட்சியாக வள்ளி முருகன் திருமணம் சிறப்பாக நடைபெறும். மேலும் பார்வதி தேவி சிவனை மணந்து கொண்ட நாள். மேலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஸ்ரீராமன்-சீதை, ஆண்டாள்-ஸ்ரீரங்கநாதர், சாவித்திரி- சத்தியவான், மயிலை கற்பாகாம்பாள்- கபாலீஸ்வரர் திருமணங்கள் நடைபெற்ற நன்னாள். இந்த தினம் ஸ்ரீஐயப்பனும், அர்ஜூனனும் அவதரித்த திருநாளாகும்.
சித்திரை-சித்ரா பவுர்ணமி :
சித்திரை மாதத்தில் பவுர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் வருவதால் அன்றைய தினம் சித்ரா பவுர்ணமி தினம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தினத்தன்று தான் எமதர்மராஜாவின் கணக்கரான சித்ரகுப்தன் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்று ஒரு நாள் விரதம் இருந்து சித்ரகுப்தனை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை நட்சத்திரம் அம்மனுக்குரிய சிறப்பு தினம். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதும் இந்நாளில்தான் சிவாலயங்களில் இன்று சிவனுக்கு மருக்கொழுத்தால் அபிஷேகம் செய்வார்கள்.
வைகாசி-வைகாசி விசாகம் :
வைகாசி மாதத்தில் பவுர்ணமியில் வரும் விசாகம் என்பது முருகப்பெருமான் பொய்கையில் ஆறுமுகங்களுடன் அவதரித்த நாளாகும். எனவே முருகன் கோவில்களில் இந்த நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். சிவாலயங்களில் சிவனுக்கு சந்தனத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்வார்கள். மேலும் புத்தபெருமான் அவதரித்ததும், ஞானம் பெற்றதும் இந்நாளில்தான்.
ஆனி-ஆனித் திருமஞ்சனம் :
ஆனி மாதத்தில் பவுர்ணமி கேட்டை நட்சத்திரத்தில் வரும் சிவன் கோவில்களில் சிவனுக்கு முக்கனிகளால் (மா, பலா, வாழை) அபிஷேகம் செய்வார்கள். ஆனி மாதத்தில் சிவபெருமான், பார்வதியின் அருளைப்பெற வழிவகுக்கும் நாளாகும். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆனித்திருமஞ்சனத் திருவிழா ஜூலை 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிக சிறப்பாக கொண்டாடப்படும். ஆனி மாதம் பவுர்ணமியன்று காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனித் திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படும்.
ஆடி-ஆடி குரு பூர்ணிமா :
ஆடி மாதத்தில் பவுர்ணமி உத்திராடம் நட்சத்திரத்தில் வரும். இந்த பவுர்ணமியில் சிவன் கோவில்களில் சிவனுக்கு காராம் பசுவின் பாலால் அபிஷேகம் செய்வார்கள். மகாபாரதம் ஸ்ரீமத் பாகவதம் போன்ற புராணங்களை எழுதியவர் வேதவியாசர். ஆடி மாத பவுர்ணமியை வியாச பூர்ணிமா அல்லது குரு பூர்ணிமா என்ற பெயரில் வியாசபகவானை பூஜிக்கிறார்கள். ஆடி மாத பவுர்ணமியில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் கஜேந்திர மோட்சம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும். அம்மன் கோவில்களிலும் இந்த பவுர்ணமி அன்று மாவிளக்கு போடுதல், பொங்கல் இடுதல், லலிதா சகஸ்ரநாமம் அர்ச்சனை போன்ற விசேஷ ஆராதனைகள் நடைபெறும்.
ஆவணி-ஆவணி அவிட்டம் :
ஆவணி-மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் வரும். இந்த பவுர்ணமியில் சிவன் கோவில்களில் சிவனுக்கு வெல்லசர்க்கரையால் அபிஷேகம் செய்வார்கள். ஆவணி மாத பவுர்ணமி அன்று வடநாட்டில் ரக்ஷாபந்தன் என்ற பண்டிகை மிக விமரிசையாக கொண்டாடப்படும். தற்போது தென் இந்தியாவிலும் இந்த பண்டிகை பிரபலமாகி வருகிறது. உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள் ஆவணி மாதத்தில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமி அன்று கொண்டாடும் பண்டிகை ஆவணி அவிட்டம் என்று அழைக்கப்படுகிறது.
புரட்டாசி-புரட்டாசி பூரட்டாதி :
புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறது. இந்த மாத பவுர்ணமியில் சிவன் கோவில்களில் சிவனுக்கு கோதுமையும் வெல்லமும் கலந்த அப்பத்தால் அபிஷேகம் செய்வார்கள். இந்த மாத பவுர்ணமி அன்று தான் உமா மகேஸ்வர விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
ஐப்பசி-ஐப்பசி அன்னாபிஷேகம் :
ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும். அன்று எல்லா சிவாலயங்களிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் மிக மிக சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி அன்னாபிஷேகம் நடைபெறும். உலகில் உள்ள ஜீவாராசிகளுக்கெல்லாம் உணவளித்துக் காக்கும் சிவபிரானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவனுக்கு அன்னம், காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்கரிக்கப்பார்கள். கேதர்நாத்தில் உள்ள சிவனுக்கு தேவபூஜை ஐப்பசி பவுர்ணமி அன்றுதான் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் கங்கை கொண்ட சோழபுரத்தில் இவ்விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை-கார்த்திகை தீபம் :
கார்த்திகை பவுர்ணமி கார்த்திகை நட்சத்திரலேயே வரும். இந்த பவுர்ணமியில் எல்ல சிவாலயங்களிலும் சிவனுக்கு பசு நெய்யால் அபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை நட்சத்திரமும் கார்த்திகை பவுர்ணமி நாளும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் எல்லா சிவாலயங்களிலும் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் ஏற்றப்படும் திருவண்ணாமலை தீபம் (டிசம்பர் 12-ந் தேதி) உலக புகழ் பெற்றது. அன்று தான் பார்வதிக்கு ஈசுவரன் இடபாகம் தந்து அர்த்தநாரீசுவரர் ஆனார் என்பர்.
மார்கழி-மார்கழி திருவாதிரை :
மார்கழி பவுர்ணமி திருவாதிரை நட்சத்திரத்தில் வரும். இது பரமசிவனின் நட்சத்திரமாகும். இந்த நாளில் சிவனுக்கு பசு நெய்யாலும் நறுமண பன்னீராலும் அபிஷேகம் செய்வார்கள். மார்கழியில் பாடப்படும் திருப்பாவை மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் என்று பவுர்ணமியில் துவங்குகிறது. கோவில்களில் ஆருத்ரா தரிசனமும் இந்த திருவாதிரை பவுர்ணமி அன்று தான் கொண்டாடப்படும்.
மாசி-மாசிமகம் :
மாசி மாதத்தில் பவுர்ணமி மகம் நட்சத்திரத்தில் வரும். சிவன் கோவில்களில் சிவனுக்குப் பசு நெய்யில் அபிஷேகம் செய்வார்கள். இந்த நாளை மாசி மகம் என்று கோவில்களில் இறைவனை புனித நீர் நிலைகளில் நீராடல் செய்து கொண்டாடுவார்கள். இந்த நாளில் கடற்கரையை ஒட்டியுள்ள கோவில்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். வீடுகளில் அன்று சித்ரான்னங்கள் பாயசம் முதலியன செய்து நிலவிற்கு படைத்து நிலவொளியில் குடும்பத்துடன் உண்டு மகிழ்வார்கள்.
பங்குனி-பங்குனி உத்திரம் :
பங்குனி மாதத்தில் பவுர்ணமி உத்திர நட்சத்திரத்தில் வரும். சிவன் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. கடவுள்களின் திருமண நாளாகவும் கொண்டாடப்படும். இந்த பவுர்ணமியன்று திருச்செந்தூர் கோவிலில் ஐராவத மண்டபத்தில் 108 சிவலிங்கங்கள் சாட்சியாக வள்ளி முருகன் திருமணம் சிறப்பாக நடைபெறும். மேலும் பார்வதி தேவி சிவனை மணந்து கொண்ட நாள். மேலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஸ்ரீராமன்-சீதை, ஆண்டாள்-ஸ்ரீரங்கநாதர், சாவித்திரி- சத்தியவான், மயிலை கற்பாகாம்பாள்- கபாலீஸ்வரர் திருமணங்கள் நடைபெற்ற நன்னாள். இந்த தினம் ஸ்ரீஐயப்பனும், அர்ஜூனனும் அவதரித்த திருநாளாகும்.
சித்திரை-சித்ரா பவுர்ணமி :
சித்திரை மாதத்தில் பவுர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் வருவதால் அன்றைய தினம் சித்ரா பவுர்ணமி தினம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தினத்தன்று தான் எமதர்மராஜாவின் கணக்கரான சித்ரகுப்தன் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்று ஒரு நாள் விரதம் இருந்து சித்ரகுப்தனை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை நட்சத்திரம் அம்மனுக்குரிய சிறப்பு தினம். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதும் இந்நாளில்தான் சிவாலயங்களில் இன்று சிவனுக்கு மருக்கொழுத்தால் அபிஷேகம் செய்வார்கள்.
வைகாசி-வைகாசி விசாகம் :
வைகாசி மாதத்தில் பவுர்ணமியில் வரும் விசாகம் என்பது முருகப்பெருமான் பொய்கையில் ஆறுமுகங்களுடன் அவதரித்த நாளாகும். எனவே முருகன் கோவில்களில் இந்த நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். சிவாலயங்களில் சிவனுக்கு சந்தனத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்வார்கள். மேலும் புத்தபெருமான் அவதரித்ததும், ஞானம் பெற்றதும் இந்நாளில்தான்.
ஆனி-ஆனித் திருமஞ்சனம் :
ஆனி மாதத்தில் பவுர்ணமி கேட்டை நட்சத்திரத்தில் வரும் சிவன் கோவில்களில் சிவனுக்கு முக்கனிகளால் (மா, பலா, வாழை) அபிஷேகம் செய்வார்கள். ஆனி மாதத்தில் சிவபெருமான், பார்வதியின் அருளைப்பெற வழிவகுக்கும் நாளாகும். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆனித்திருமஞ்சனத் திருவிழா ஜூலை 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிக சிறப்பாக கொண்டாடப்படும். ஆனி மாதம் பவுர்ணமியன்று காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனித் திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படும்.
ஆடி-ஆடி குரு பூர்ணிமா :
ஆடி மாதத்தில் பவுர்ணமி உத்திராடம் நட்சத்திரத்தில் வரும். இந்த பவுர்ணமியில் சிவன் கோவில்களில் சிவனுக்கு காராம் பசுவின் பாலால் அபிஷேகம் செய்வார்கள். மகாபாரதம் ஸ்ரீமத் பாகவதம் போன்ற புராணங்களை எழுதியவர் வேதவியாசர். ஆடி மாத பவுர்ணமியை வியாச பூர்ணிமா அல்லது குரு பூர்ணிமா என்ற பெயரில் வியாசபகவானை பூஜிக்கிறார்கள். ஆடி மாத பவுர்ணமியில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் கஜேந்திர மோட்சம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும். அம்மன் கோவில்களிலும் இந்த பவுர்ணமி அன்று மாவிளக்கு போடுதல், பொங்கல் இடுதல், லலிதா சகஸ்ரநாமம் அர்ச்சனை போன்ற விசேஷ ஆராதனைகள் நடைபெறும்.
ஆவணி-ஆவணி அவிட்டம் :
ஆவணி-மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் வரும். இந்த பவுர்ணமியில் சிவன் கோவில்களில் சிவனுக்கு வெல்லசர்க்கரையால் அபிஷேகம் செய்வார்கள். ஆவணி மாத பவுர்ணமி அன்று வடநாட்டில் ரக்ஷாபந்தன் என்ற பண்டிகை மிக விமரிசையாக கொண்டாடப்படும். தற்போது தென் இந்தியாவிலும் இந்த பண்டிகை பிரபலமாகி வருகிறது. உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள் ஆவணி மாதத்தில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமி அன்று கொண்டாடும் பண்டிகை ஆவணி அவிட்டம் என்று அழைக்கப்படுகிறது.
புரட்டாசி-புரட்டாசி பூரட்டாதி :
புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறது. இந்த மாத பவுர்ணமியில் சிவன் கோவில்களில் சிவனுக்கு கோதுமையும் வெல்லமும் கலந்த அப்பத்தால் அபிஷேகம் செய்வார்கள். இந்த மாத பவுர்ணமி அன்று தான் உமா மகேஸ்வர விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
ஐப்பசி-ஐப்பசி அன்னாபிஷேகம் :
ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும். அன்று எல்லா சிவாலயங்களிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் மிக மிக சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி அன்னாபிஷேகம் நடைபெறும். உலகில் உள்ள ஜீவாராசிகளுக்கெல்லாம் உணவளித்துக் காக்கும் சிவபிரானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவனுக்கு அன்னம், காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்கரிக்கப்பார்கள். கேதர்நாத்தில் உள்ள சிவனுக்கு தேவபூஜை ஐப்பசி பவுர்ணமி அன்றுதான் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் கங்கை கொண்ட சோழபுரத்தில் இவ்விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை-கார்த்திகை தீபம் :
கார்த்திகை பவுர்ணமி கார்த்திகை நட்சத்திரலேயே வரும். இந்த பவுர்ணமியில் எல்ல சிவாலயங்களிலும் சிவனுக்கு பசு நெய்யால் அபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை நட்சத்திரமும் கார்த்திகை பவுர்ணமி நாளும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் எல்லா சிவாலயங்களிலும் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் ஏற்றப்படும் திருவண்ணாமலை தீபம் (டிசம்பர் 12-ந் தேதி) உலக புகழ் பெற்றது. அன்று தான் பார்வதிக்கு ஈசுவரன் இடபாகம் தந்து அர்த்தநாரீசுவரர் ஆனார் என்பர்.
மார்கழி-மார்கழி திருவாதிரை :
மார்கழி பவுர்ணமி திருவாதிரை நட்சத்திரத்தில் வரும். இது பரமசிவனின் நட்சத்திரமாகும். இந்த நாளில் சிவனுக்கு பசு நெய்யாலும் நறுமண பன்னீராலும் அபிஷேகம் செய்வார்கள். மார்கழியில் பாடப்படும் திருப்பாவை மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் என்று பவுர்ணமியில் துவங்குகிறது. கோவில்களில் ஆருத்ரா தரிசனமும் இந்த திருவாதிரை பவுர்ணமி அன்று தான் கொண்டாடப்படும்.