ஆன்மிகம்

வரலட்சுமி விரத வழிபாட்டால் கிடைக்கும் பலன்கள்

Published On 2016-08-12 07:15 IST   |   Update On 2016-08-12 07:15:00 IST
வரலட்சுமி விரத வழிபாட்டிடை நெறிதவறாமல் கடைபிடிப்பவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.
வரலட்சுமி விரத வழிபாட்டிடை நெறிதவறாமல் கடைபிடிப்பவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.

லட்சுமி பூஜை செய்யும்போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.

வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.

லட்சுமியை வழிபட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல்நலம் உண்டாகும்.

வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும்.

எட்டுவிதச் செல்வங்களை தருவதுடன் தாலி பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் இத்தினத்தில் மகாலட்சுமியை போற்ற இவ்விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.

மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக் காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடு தான். எனவே இதை மறக்கக் கூடாது.

பூஜை செய்யும்போது மகாலட்சுமி சூரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம். வரலட்சுமி நோன்பை கடைபித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.

இது ஒரு மங்களகரமா விரதம், மனதிற்கு நிம்மதி தரும் விரதம். இம்மையும் மறுமையும் தரும் இனிய விரதமாகும்.

Similar News