ஆன்மிகம்

கேதார கௌரி விரத காப்பு

Published On 2016-08-04 13:44 IST   |   Update On 2016-08-04 13:44:00 IST
கேதார கெளரி விரதம் சர்வ மங்களங்களையும் தரும் விரதம் ஆகும்.
திருக்கைலாயத்தில் சிவபெருமானுக்கும் உமையம்மையாளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிகழ்ந்தது. பிருங்கி முனிவர் அம்பாளை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கினார். எல்லாம் வல்ல ஆதிபராசக்தி நானே, என்னை ஏன் அவர் வணங்கவில்லை என அம்பிகை சிவனிடம் கேட்க அவர் மஹா முனிவர், மோட்சம் அவருக்குக் கிடைக்கும். எனவே “ஓம் நமசிவாய” எனக் கூறி என்னை வழிபட்டார் என சிவன் கூறினார்.

இதனால் கோபமுற்ற தேவி பூவுலகிற்கு வந்தார். இங்கே கெளதம முனிவரின் ஆலோசனைப்படி சிவலிங்கஞ் செய்து தினமும் சிவபூஜையை வில்வம் இலையால் செய்து சிவதியானத்தில் 21 நாட்கள் இருந்தார். அம்பிகையின் சிவபக்தியைக் கண்டு மகிழ்வுற்ற சிவபெருமான் 21ஆம் நாள் பூவுலகிற்கு வந்து இறைவியைத் தமது இடதுபாகத்தில் இருத்திக் கொண்டார்.

கேதார கெளரி விரதம் சர்வ மங்களங்களையும் தரும் விரதம் ஆகும். கல்வி, உத்தியோகம், வியாபாரம், திருமணம் முதலானவற்றை எமக்குத் தருவதோடு நோய் நொடி அற்ற வாழ்வையும் தரவல்லது.

கேதார கெளரி விரதம் புரட்டாதி மாதம் சுக்கில பக்ஷ தசமி முதல் ஐப்பசி அமாவாசையுடன் நிறைவுறும் விரதம் ஆகும். இவ்விரதத்தை ஆரம்ப தினத்தன்று சங்கற்பித்து ஆரம்பிப்பது வழக்கம். தினமும் வீட்டில் பூஜை வழிபாடு செய்து மாலையில் விசேஷமாக தேவாலய தர்சனஞ் செய்வது வழிபாட்டு முறையாகும். ஸ்ரீ பஞ்சாக்ஷர மந்திர ஜபம், திருமுறைப்பாராயணஞ் செய்தல் வேண்டும். கேதார கெளரிக்கதையை படிக்கலாம். அல்லது கோவிலில் மாலைப் பூஜையின் பின்னர் கதை படிக்கும்போது கேட்டு வணங்கலாம்.

நோயாளிகள் மதிய போசனஞ் செய்து இரவு தேவ தர்சனத்தின் பின் பால்பழம் அருந்தலாம். ஏனையோர் மாலைப் பூஜையின் பின் தானியம், பழம் சாப்பிட்டு விரதத்தை அனுஷ்டிக்கலாம். முடிவற்று உபவாசம் இருந்து பாறனை செய்து தானதர்மங்களையும் செய்து கேதார கெளரி விரதத்தை மங்களமாக நிறைவு செய்து கொள்ளலாம்.

Similar News