ஆன்மிகம்

வீட்டில் சக்தி விரத வழிபாடு வழிமுறைகள்

Published On 2016-06-25 13:55 IST   |   Update On 2016-06-25 13:55:00 IST
அம்பிகையை, அம்மனை, அன்னையாய்ப் போற்றும் பராசக்தியை நம் இல்லங்களில் வழிபடவும் ஆராதிக்கவும் சில வழிமுறைகள் உள்ளன.
இல்லத்தில் சக்தி பூஜை
 
குறைந்தபட்சம் காலை மாலை வேளைகளில் விளக்கேற்றி வைத்து செம்பருத்தி, அரளி முதலிய செம்மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம். குறிப்பாகச் செவ்வாய், வெள்ளி இரு தினங்களும் அம்பிகைக்குப் பூஜை செய்ய ஏற்ற தினங்கள்.

நிவேதனம்
 
`பாயஸான்னப் பிரியை,‘‘ என்று அன்புடன் அழைக்கப்படும் அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது பால் பாயசத்துடன் வடையும் நிவேதனமாக அளிக்கப்படுகிறது.
 
குத்து விளக்குப் பூஜை
 
ஆடி, தை மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் கோயில்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறுகின்றன. திருமணமான பெண்களும், இளம் பெண்களும் குத்து விளக்கேற்றி வைத்து, அதில் அம்பிகையை ஆவாஹனம் செய்து குங்குமம், மற்றும் மலர்களால் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்து பூஜிப்பது நன்மை தரும் என்பது நம்பிக்கை. அஞ்ஞான இருளை அகற்றி வாழ்வில் ஒளிபரப்பும் திருவிளக்கைப் பராசக்தி ஸ்வரூபமாகப் பார்க்கிறோம்.
 
ஸ்ரீவித்யா உபாசனை
 
இன்னும் ஒருபடி மேலே போய் அம்பிகையை ஸ்ரீசக்ரவடிவில் அமைத்து, ஸ்ரீவித்யா உபாசகர்களாகத் தினம் நியமங்களின்படி ஆராதிப்பவர்களும் உண்டு. இதற்குத் தேர்ந்த பக்தியும், தினசரி நியமங்களும் மிகவும் தேவை. நன்கு கற்றுத் தேர்ந்த குருவிடம் பயின்ற பின்னரே இவ்வகை ஆராதனை (உபாசனை) செய்ய முடியும்.

Similar News