ஆன்மிகம்

பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளும் வெள்ளி விரதம்

Published On 2016-06-10 13:42 IST   |   Update On 2016-06-10 13:42:00 IST
அம்பிகைக்கும், முருகனுக்கும் உகந்த நாளான வெள்ளியில் விரதம் இருந்தால் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெறுவர்.
விரதங்களில் சிறந்தது வெள்ளிக்கிழமை விரதம். இதனை சுக்கிரவார விரதம் என்று குறிப்பிடுவர். அம்பிகைக்கும், முருகனுக்கும் உகந்த நாளான வெள்ளியில் விரதம் இருந்தால் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெறுவர். சுமங்கலி பாக்கியம், குழந்தைப்பேறு, செல்வவளம் உண்டாகும்.

தை, ஆடி வெள்ளிக்கிழமைகள் மேலும் சிறப்பானவை. வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து உங்கள் வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றி விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து விரதத்தை கடைபிடித்து வந்தால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் என்பது சாஸ்திர விதி.

Similar News