ஆன்மிகம்

சதுர்த்தி விரதம் இருந்து வணங்க வேண்டிய மணக்குள விநாயகர்

Published On 2016-05-23 13:53 IST   |   Update On 2016-05-23 13:53:00 IST
விநாயகரை சதுர்த்தி விரதம் வரும் ஆவணி மாதத்தில் விரதமிருந்து சென்று வழிபட்டு வந்தால், சகல பாக்கியங்களையும் பெறுவதற்கான வழிபிறக்கும்.
புதுச்சேரி மாநிலத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த கோவில்களில் ஒன்றாக இருப்பது மணக்குள விநாயகர் ஆலயம். இவரை வழிபட்டால் மனதில் நினைத்த காரியங்கள் விரைவில் நிறைவேறுவதாக மக்களின் நம்பிக்கை. அற்புத கீர்த்தி தரும் மணக்குள விநாயகர் ஆலயத்தின் மேற்புறத்தில், ஒரு குளம் இருக்கிறது.

கடற்கரை அருகில் உள்ளதால், அதில் மணல் அதிகமாக இருக்கும். அந்தக் குளத்திற்கு ‘மணல் குளம்’ என்று பெயர். அதனால் மணக்குள விநாயகர் ஆலயம் என்று பெயர் வந்துள்ளது. இந்த விநாயகரை சதுர்த்தி விரதம் வரும் ஆவணி மாதத்தில் விரதமிருந்து சென்று வழிபட்டு வந்தால், சகல பாக்கியங்களையும் பெறுவதற்கான வழிபிறக்கும்.

முதன் முதலில் சதுர்த்தி விரதம் தொடங்குபவர்கள் ஆவணி மாதம் வரும் சதுர்த்தியில் விரதம் இருந்து மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று தரித்த பின் தொடங்க வேண்டும். வினைகளை தீர்ப்பவர் விநாயகர். அதனால் முதன் முதலாக எந்த காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் விநாயருக்கு விரதம் இருந்து அவரை வழிபட்ட பின்னர் ஆரம்பிக்க வேண்டும்.

Similar News