ஆன்மிகம்

ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம்

Published On 2016-04-25 06:28 GMT   |   Update On 2016-04-25 06:27 GMT
பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்களில் ஒன்றாக நவராத்திரி விரதம் விளங்குகின்றது.
நவராத்திரி விரதமானது துர்க்கை, லக்ஷ்மி மற்றும் சரஸ்வதியை நினைத்து 9 நாட்கள் வழிபடும் விரதமாகும். இதன் காரணமாக இதனை பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை எனப் பலரும் கருதுகின்றார்கள்.

மேலும், இந்த விரதத்தை பெண்கள் மட்டுமே அனுஷ்டிக்க வேண்டும் என்றும் பலரும் தவறாக எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்களில் ஒன்றாக நவராத்திரி விரதம் விளங்குகின்றது.

ஏனென்றால், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன. எனவே, நவராத்திரியானது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமாக காணப்படுகின்றது.
 

Similar News