ஆன்மிகம்

சுக்கிரதோஷ விரத வழிபாடு செய்யும் முறை

Published On 2016-04-11 08:54 IST   |   Update On 2016-04-11 08:54:00 IST
சுக்கிர பகவானின் அருள் கிடைக்கவும், இல்லற சுகத்தை பெறவும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து சுக்கிரனை வழிபட வேண்டும்.
ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளுக்கு அதிபதியாக விளங்குபவர் சுக்ரன். இவருக்கு புதன், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் நண்பர்கள். சூரியனும், சந்திரனும் பகை கிரகங்கள். சுக்ர திசை இருபது ஆண்டுகள். சுக்கிரன் தன்னை வழிபடுபவர்களுக்கு சுகம், அழகு, நாவண்மை, நன்மதிப்பு போன்ற நற்பலன்களை அருள்வார்.

இல்லற சுகத்தை தருபவரும் அவரே. சுக்ர திசை நடக்கும் போது தீயக்கோள்களின் பார்வைபட்டாலோ, தீயச் சேர்க்கை ஏற்பட்டாலோ கெடுதியான பலன்களே உண்டாகும். இதனையே சுக்ர தோஷம் என்பார்கள். சுக்கிரனால் கண்நோய், பால்வினை நோய்கள், சிறுநீரக நோய்கள் உண்டாகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து, சுக்ர பகவானுக்கு வெள்ளை ஆடை அணிவித்து, வெண்தாமரையால் அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் சுக்ர தோஷங்கள் விலகும்.

Similar News