ஆன்மிகம்
கோரிப்பாளையம் தர்கா

கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா 23-ந் தேதி தொடங்குகிறது

Published On 2021-10-19 04:08 GMT   |   Update On 2021-10-19 04:08 GMT
மதுரை கோரிப்பாளையம் தர்காவில் இந்த ஆண்டிற்கான உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா வருகிற 23-ந் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தர்கா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த தர்காவில் இந்த ஆண்டிற்கான உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

அன்று இரவு விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் மின்சார அலங்காரத்துடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க, ஒட்டகம், யானை நாட்டிய குதிரையுடன் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக தர்காவை வந்தடையும். விழாவையொட்டி தொடர்ந்து 3 நாட்களும் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடைபெறும்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி பாஷல்பாஷா, டிரஸ்டிகள் சையது பாபுஜான், சுல்தான்பாஷா, தாஜுதீன், பாபு மற்றும் விழா குழுவினர் பரம்பரை ஹக்தார்கள் ஆகியோர் கொரோனா தடுப்பு வழிகாட்டுதலின்படி செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News