ஆன்மிகம்
இறைவனுக்கு அடிபணிவோம்

பக்ரீத் பண்டிகை: இறைவனுக்கு அடிபணிவோம்

Published On 2021-07-21 03:19 GMT   |   Update On 2021-07-21 03:19 GMT
இப்ராகிம் நபி அவர்கள் இறைவனின் கட்டளையை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு தன் அன்பு மகனையே பலியிட முற்படும்போது இறைவன் உன் மகனை பலியிட வேண்டாம் என தடுத்து அதற்கு பதிலாக ஒரு ஆட்டை பலியிடுமாறு கட்டளையிட்டான்.
பக்ரீத் பண்டிகையையொட்டி மன்னான் பீடி பேக்டரி மேனேஜிங் பார்ட்னர் அல்ஹாஜ் எம்.நாசர்கான் என்கிற அமான் தெரிவித்துள்ளதாவது:-

தனக்காக வாழும் மனிதன் பிறருக்காக வாழத் தொடங்கும் போது ஒளிர தொடங்குகிறான். இறைவனின் நேசத்துக்கு தகுதியானவன் ஆகிறான். அதே மனிதன் தன் முழு வாழ்வையும் இறைவனுக்காக அர்ப்பணித்து இறைவனுக்கு அடி பணிந்து துயரங்களை சகித்துக் கொண்டு இறைவனின் திருப்திக்காகவே வாழும் போது புனிதன் ஆகிறான். அப்படிப் பட்டவர்தான் இறைதூதர் இப்ராகிம் நபி (அலை) அவர்கள்.

இப்ராகிம் நபி அவர்கள் இறைவனின் கட்டளையை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு தன் அன்பு மகனையே பலியிட முற்படும்போது இறைவன் உன் மகனை பலியிட வேண்டாம் என தடுத்து அதற்கு பதிலாக ஒரு ஆட்டை பலியிடுமாறு கட்டளையிட்டான். அவரும் அவ்வாறே செய்தார். இறைவன் தன் திருமறை குர்ஆனில் கூறுகிறான். பலியிடப்படும், அறுக்கப்படும் பிராணியின் இறைச்சியோ, ரத்தமோ என்னை வந்து அடைவது இல்லை. உங்களின் இறையச்சமே என்னை வந்து அடைகிறது. ஆடு ேபான்ற பிராணியை நாம் பலியிடும் போது அதாவது குர்பானி கொடுக்கும் போது நமது பொருளாசை, உலக ஆசை, பேராசை இவை அனைத்தையும் குர்பானி கொடுப்பதாகவே பொருள் கொள்ள வேண்டும். இஸ்லாமிய சகோதரர்களுக்கும், சகோதரத்துவம் காத்து மதநல்லிணக்கத்தின்படி வாழும் சகோதர சமுதாய மக்கள் அனைவருக்கும், எங்களின் அன்பு வியாபார பெருமக்களுக்கும் எங்களின் உளம் நிறைந்த பக்ரீத் தியாகத் திருநாள் வாழ்த்துக்களை கூறி கொள்வதில் ெபருமகிழ்ச்சி அடைகிறேன்.

இன்ஷா அல்லா, இந்த ஆண்டும் வல்ல இறைவனின் நாட்டப்படி ஹஜ் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் இறைவனின் விருந்தாளிகள் அனைவரும் ஹாஜிகளாக நலமுடனும் இறை அருளுடனும் வரவேண்டுமென எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாயிலாக பிரார்த்தனை செய்வதோடு இந்த வாய்ப்பினை (ஹஜ் கடமை) உலக முஸ்லிம்கள் அத்துணை பேருக்கும் இறைவன் அருள்வாராக! ஆமீன்!

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News