ஆன்மிகம்
நாகூர் தர்கா

நாகூர் தர்காவில் உள்ள சின்ன ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி

Published On 2021-07-14 02:14 GMT   |   Update On 2021-07-14 02:14 GMT
நாகூர் செய்யது முகமது யூசுப் சாஹிப் தாதா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தன பூசும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
நாகையை அடுத்த நாகூரில் பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவில் சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் செய்யது முகமது யூசுப் சாஹிப் தாதா கந்தூரி விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு சின்ன ஆண்டவர் கந்தூரி விழா கடந்த 11-ந் தேதி இரவு தொடங்கியது. தர்கா அலங்கார வாசல் முன்பு தொட்டி பந்தல் அமைக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தன பூசும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

இதில் சின்ன ஆண்டவர் சமாதிக்கு தர்கா கலிபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார். நிகழ்ச்சி டிரஸ்டிகள், தர்கா ஆதீனஸ்தர்கள் உள்பட பலர் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாலசோழன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News