ஆன்மிகம்
நாகூர் தர்கா

நாகூர் தர்காவில் இன்று சந்தன பூசும் நிகழ்ச்சி

Published On 2021-07-13 02:34 GMT   |   Update On 2021-07-13 02:34 GMT
நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்காவில் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தன பூசும் நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.
நாகையை அடுத்த நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் செய்யது முகமது யூசுப் சாஹிப் தாதா சமாதி உள்ளது. ஆண்டு தோறும் சின்ன ஆண்டவர் கந்தூரி விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

கடந்த ஆண்டு விழா கொரோனா ஊரடங்கு காரணமாக மிக எளிமையான முறையில் நடைபெற்றது. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் சின்ன ஆண்டவர் கந்தூரி விழா நேற்று இரவு தொடங்கியது.

முன்னதாக தர்கா அலங்காரவாசல் முன்பு தொட்டில் அமைக்கப்பட்டது. இதில் திரளானோர் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தன பூசும் நிகழ்ச்சி இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.

Tags:    

Similar News