ஆன்மிகம்
ஒப்பணக்கார வீதியில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திய போது எடுத்த படம்.

பள்ளிவாசல்கள் திறப்பு- இஸ்லாமியர்கள் தொழுகை

Published On 2021-07-06 08:46 IST   |   Update On 2021-07-06 08:46:00 IST
கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிவாசல்கள் மற்றும் மசூதிகளில் இஸ்லாமியர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து தொழுகை நடத்தினர்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதையொட்டி கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் நேற்று திறக்கப்பட்டன.

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள மசூதியில் அத்தர் ஜமாத் அமைப்பினர் தொழுகையில் ஈடுபட்டனர். இது போல் மற்ற பள்ளிவாசல்கள் மற்றும் மசூதிகளில் இஸ்லாமியர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து தொழுகை நடத்தினர்.

Similar News