ஆன்மிகம்
பிறருக்கு வழங்குவது இஸ்லாத்தின் கடமை
அல்லாஹ்வை வணங்கி வாழ்ந்தால் மட்டும் போதாது, “பிறருக்கு வழங்கியும் வாழ வேண்டும்“ இதுதான் இஸ்லாமின் அடிப்படை தத்துவம்.
வளைவதெல்லாம் வில்லா...
ஜொலிப்பதெல்லாம் மாணிக்க கல்லா...
உனக்கு ஈடு இணையில்லையே... அல்லா
உயிரினங்களை காக்க வேண்டுமே.... நல்லா.
“லாயிலாஹா இல்லல்லா
முஹம்மதுர் ரசூலுல்லா”
நாம் எப்படி ஒருவரை ஒருவர் அனுசரித்து ஆதரித்து வாழ வேண்டும் என்று ரமலான் நோன்பு வெகு ஆழமாக, அழகாக சொல்லிக் கொடுத்திருக்கிறது. புனிதமிகு ரமலான் நோன்பின் காரணமாக அனைவரிடமும் கோபப்படாமல், பொறுமையாக, நிதானமாக இந்த மாதத்தில் நடந்து கொண்டோம்.
உண்மையிலேயே இது மிகவும் வரவேற்கத் தக்கதாகும். இது ரமலானில் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் பின்பற்றப்பட வேண்டும்.
அல்லாஹ்வை வணங்கி வாழ்ந்தால் மட்டும் போதாது, “பிறருக்கு வழங்கியும் வாழ வேண்டும்“ இதுதான் இஸ்லாமின் அடிப்படை தத்துவம். இதனால்தான் “ஜகாத்” (தர்மம்) நமக்கு கடமை ஆக்கப்பட்டிருக்கிறது. ஒரு முஸ்லிமிடம் குறிப்பிட்ட அளவு செல்வம் சேர்ந்து அது ஒரு வருடத்திற்கு மேலாக அவரது உடமையில் இருந்தால் அந்தப் பணத்தில் 40-ல் ஒரு பங்கு அதாவது 2 1/2 சதவீதம் ஜகாத் (தர்மம்) செய்ய வேண்டும்.
ரமலான் நோன்பின் மூலம் 30 நாட்களும் பெறும் பயிற்சியின் மூலம் அந்த ஆண்டின் மீதமுள்ள 335 நாட்களிலும் நாம் நல்லொழுக்கமும் நல்ல சிந்தனையும், உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் நல் அமல்களை நாம் தொடராமல் விட்டு விடுகிறோம். இந்த நிலை மாற வேண்டும்.
“சலாமத்” எனும் நிம்மதி கிடைக்க வேண்டுமெனில் ஒற்றுமை எனும் குர் ஆனியக் கயிற்றை கட்டாயம் நாம் கைப்பற்றி நிற்க வேண்டும்.
அல்லாஹ்வை வணங்குவோம்
அடியார்களுக்கு வாழங்குவோம்
புனித ரமலான் வாழ்த்துக்கள்.
ஜொலிப்பதெல்லாம் மாணிக்க கல்லா...
உனக்கு ஈடு இணையில்லையே... அல்லா
உயிரினங்களை காக்க வேண்டுமே.... நல்லா.
“லாயிலாஹா இல்லல்லா
முஹம்மதுர் ரசூலுல்லா”
நாம் எப்படி ஒருவரை ஒருவர் அனுசரித்து ஆதரித்து வாழ வேண்டும் என்று ரமலான் நோன்பு வெகு ஆழமாக, அழகாக சொல்லிக் கொடுத்திருக்கிறது. புனிதமிகு ரமலான் நோன்பின் காரணமாக அனைவரிடமும் கோபப்படாமல், பொறுமையாக, நிதானமாக இந்த மாதத்தில் நடந்து கொண்டோம்.
உண்மையிலேயே இது மிகவும் வரவேற்கத் தக்கதாகும். இது ரமலானில் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் பின்பற்றப்பட வேண்டும்.
அல்லாஹ்வை வணங்கி வாழ்ந்தால் மட்டும் போதாது, “பிறருக்கு வழங்கியும் வாழ வேண்டும்“ இதுதான் இஸ்லாமின் அடிப்படை தத்துவம். இதனால்தான் “ஜகாத்” (தர்மம்) நமக்கு கடமை ஆக்கப்பட்டிருக்கிறது. ஒரு முஸ்லிமிடம் குறிப்பிட்ட அளவு செல்வம் சேர்ந்து அது ஒரு வருடத்திற்கு மேலாக அவரது உடமையில் இருந்தால் அந்தப் பணத்தில் 40-ல் ஒரு பங்கு அதாவது 2 1/2 சதவீதம் ஜகாத் (தர்மம்) செய்ய வேண்டும்.
ரமலான் நோன்பின் மூலம் 30 நாட்களும் பெறும் பயிற்சியின் மூலம் அந்த ஆண்டின் மீதமுள்ள 335 நாட்களிலும் நாம் நல்லொழுக்கமும் நல்ல சிந்தனையும், உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் நல் அமல்களை நாம் தொடராமல் விட்டு விடுகிறோம். இந்த நிலை மாற வேண்டும்.
“சலாமத்” எனும் நிம்மதி கிடைக்க வேண்டுமெனில் ஒற்றுமை எனும் குர் ஆனியக் கயிற்றை கட்டாயம் நாம் கைப்பற்றி நிற்க வேண்டும்.
அல்லாஹ்வை வணங்குவோம்
அடியார்களுக்கு வாழங்குவோம்
புனித ரமலான் வாழ்த்துக்கள்.