ஆன்மிகம்
கல்யாண வரம் தரும் வள்ளியூர் முருகன்
கல்யாணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், வாழ்வில் ஒரேயொரு முறை வள்ளியூர் சுப்ரமணியரைத் தரிசித்தால் போதும்... விரைவில் கல்யாண வரத்தைத் தந்தருள்வார் சுப்ரமண்யர் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!
கல்யாணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், வாழ்வில் ஒரேயொரு முறை வள்ளியூர் சுப்ரமணியரைத் தரிசித்தால் போதும்... விரைவில் கல்யாண வரத்தைத் தந்தருள்வார் சுப்ரமண்யர் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில், சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது வள்ளியூர். இங்கே, குன்றின் மேலே கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசுப்ரமண்யர்! குன்றிருக்கும் இடத்தில் குமரன் இருப்பான். குமரன் இருக்கும் இடத்தில், நமக்கு குறைவே இருக்காது என்பது ஐதீகம்!
கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை தெப்போத்ஸவம் சிறப்புற நடைபெறுகிறது. அதையொட்டி நடைபெறும் திருக்கல்யாணத்திலும் மாதந்தோறும் சஷ்டி நாளிலும் இங்கு வந்து ஸ்ரீசுப்ரமண்யரை வேண்டினால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது நம்பிக்கை!
மேலும் தை மாதம் வந்து விட்டால், தை மாத செவ்வாய், வெள்ளி , தை மாத சஷ்டி மற்றும் தைப்பூச நன்னாளிலும் இங்கு விரதம் இருந்து வள்ளி மணாளனை, வள்ளியூருக்கு வந்து தரிசிக்கின்றனர். கல்யாண வரம் கைகூடிவரும் என்பது உறுதி!
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில், சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது வள்ளியூர். இங்கே, குன்றின் மேலே கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசுப்ரமண்யர்! குன்றிருக்கும் இடத்தில் குமரன் இருப்பான். குமரன் இருக்கும் இடத்தில், நமக்கு குறைவே இருக்காது என்பது ஐதீகம்!
கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை தெப்போத்ஸவம் சிறப்புற நடைபெறுகிறது. அதையொட்டி நடைபெறும் திருக்கல்யாணத்திலும் மாதந்தோறும் சஷ்டி நாளிலும் இங்கு வந்து ஸ்ரீசுப்ரமண்யரை வேண்டினால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது நம்பிக்கை!
மேலும் தை மாதம் வந்து விட்டால், தை மாத செவ்வாய், வெள்ளி , தை மாத சஷ்டி மற்றும் தைப்பூச நன்னாளிலும் இங்கு விரதம் இருந்து வள்ளி மணாளனை, வள்ளியூருக்கு வந்து தரிசிக்கின்றனர். கல்யாண வரம் கைகூடிவரும் என்பது உறுதி!