ஆன்மிகம்
சக்கரபாணி

கிரக தோஷம் அகல வழிபட வேண்டிய கோவில்..

Published On 2021-04-17 09:03 GMT   |   Update On 2021-04-17 09:03 GMT
இத்தலம், கிரக தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. சனி திசை, ராகு திசை, கேது புத்தி போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், இத்தல நாயகனுக்கு, செவ்வரளி, செம்பருத்தி, துளசி மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்வது மிகுந்த பலன் அளிக்கும்.
கும்பகோணத்தில் உள்ளது சக்கரபாணி திருக்கோவில். இங்கு எழுந்தருளி இருக்கும் சக்கரபாணி, சக்கர வடிவ தாமரை பூவுடன் கூடிய அறுங்கோண எந்திரத்தில், ஆயுதம் ஏந்திய எட்டு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

இங்குள்ள இறைவனை வழிபாடு செய்தால், கிரக தோஷங்கள் நீங்கும். நவக்கிரக நாயகனான சூரிய தேவனே, தன்னுடைய ஒளியையும், வலிமையையும் இழந்திருந்த நேரத்தில், இத்தல இறைவனை வழிபட்டு, இழந்த ஒளியை திரும்பப் பெற்றான் என்பது தல வரலாறு.

எனவே இத்தலம், கிரக தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. சனி திசை, ராகு திசை, கேது புத்தி போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், இத்தல நாயகனுக்கு, செவ்வரளி, செம்பருத்தி, துளசி மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்வது மிகுந்த பலன் அளிக்கும்.

சக்கரபாணி, ருத்ராம்சம் கொண்டு விளங்குபவர். எனவே இவருக்கு வன்னி இலை மற்றும் வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்வது மேலும் சிறப்புக்குரியது.
Tags:    

Similar News