ஆன்மிகம்
விரைவில் கடனை அடைக்க உதவும் மைத்ர முகூர்த்தம்

விரைவில் கடனை அடைக்க உதவும் மைத்ர முகூர்த்தம்

Published On 2021-01-13 06:57 GMT   |   Update On 2021-01-13 16:20 GMT
மைத்ர முகூர்த்த நாளையும், நேரத்தையும் பயன்படுத்தி, உங்களால் முடிந்த தொகையைக் கொடுத்தால், விரைவிலேயே கடனையெல்லாம் அடைத்துவிடுவீர்கள் என்பது உறுதி என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.
ஜனவரி மாதத்தில் உள்ள மைத்ர முகூர்த்த நாட்களில், நீங்கள் வாங்கிய கடன் தொகையில் ஒரு சிறு அளவேனும் திருப்பிக் கொடுங்கள். இந்த மைத்ர முகூர்த்த நாளையும், நேரத்தையும் பயன்படுத்தி, உங்களால் முடிந்த தொகையைக் கொடுத்தால், விரைவிலேயே கடனையெல்லாம் அடைத்துவிடுவீர்கள் என்பது உறுதி என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

2021ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் மூன்று மைத்ர முகூர்த்த நாட்கள் வருகின்றன. வருகிற 20ம் தேதி மதியம் 2 மணி முதல் 2.55 வரை மைத்ர முகூர்த்தம். 21ம் தேதி மதியம் 1.10 முதல் 3.10 மணி வரை மைத்ர முகூர்த்தம்.

மைத்ர முகூர்த்த நாளில், கடன் வாங்கியவரை சந்தித்து அந்தத் தொகையைக் கொடுக்க இயலாத நிலை இருந்தால், நாம் கொடுக்க திட்டமிட்டிருந்த தொகையை சுவாமிப் படத்துக்கு முன்னே வைத்துவிடுங்கள். மைத்ர முகூர்த்த நேரத்தில் சுவாமி படத்துக்கு முன்னே வைத்துவிட்டு, அன்றைய நாளிலோ அதையடுத்த நாளிலோ வழங்குங்கள். சீக்கிரமே கடன் பிரச்சினையில் இருந்து விடுபடுவீர்கள். கடனில்லா பெருவாழ்வு வாழ்வீர்கள்!
Tags:    

Similar News