ஆன்மிகம்
தோஷங்கள் விலகவும், ஏழ்மை நீங்கவும் தீபாவளி அன்று முதலில் சூரிய உதயத்திற்கு முன்னர், எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
தோஷங்கள் விலகவும், ஏழ்மை நீங்கவும் தீபாவளி அன்று முதலில் சூரிய உதயத்திற்கு முன்னர், எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். குளிக்க வென்னீர்தான் பயன்படுத்த வேண்டும். அந்த வாளியில் மஞ்சள், சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். தீபாவளி தினத்தன்று கங்கை அம்மன் தூய்மையான தீர்த்தங்களில் தோன்றுகிறாள். இதனால் கங்கையை நாம் நம் இல்லத்தில் இருந்தபடியே பூஜிப்பதாகவும் ஐதீகம்.
இதன் பயனாக தூய்மையான தண்ணீருக்கு தெய்வீக சக்தி கிடைக்கிறது. அதில் நீராடுவதால் உடலில் இருக்கும் தோஷங்கள் நீங்குகிறது. விடிவதற்குள் அதிகாலையில் குளித்து விட வேண்டும் சூரிய உதயத்திற்கு பின்னர் அமாவாசையின் சக்தி அதிகரிக்கும். அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளித்தால், பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாவோம். இதனால் ஸ்ரீமகாலட்சுமி யும், திருமாலும் நம் மேல் கருணை காட்ட மாட்டார்கள் என்று ஒரு கருத்து உண்டு. எனவே தோஷங்கள் விலக வேண்டுமானால் அதிகாலை 5 மணிக்கெல்லாம் குளித்து விடுங்கள்.
அதுபோல, நண்லெண்ணையை கண்டிப்பாக தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் சனிஸ்வர பகவானின் பிடியில் இருந்தும் தப்பிப்போம். இது ஏழ்மையை விரட்டும்.
துஷ்ட சக்தியை விரட்டும் பட்டாசு
பட்டாசு வெடிப்பதால் துஷ்டசக்திகள் விலகும். அதனால்தான் சில ஆலயங்களில் வெடி வெடிப்பார்கள். இதனால் துஷ்ட சக்திகள் விலகும்.
தோஷத்தை நீக்கும் மஞ்சள்
தீபாவளி தினத்தன்று புது உடை உடுத்தும்போது கண்டிப்பாக மிகச் சிறிய அளவில் மஞ்சள் வைத்த பிறகே அந்த புத்தாடையை உடுத்த வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கும்.
வாழ்வை வெளிச்சமாக்கும் தீப ஒளி
தீப திருநாள் அன்று இல்லத்தில் விளக்கு ஏற்ற வேண்டும். நம் வீட்டு பூஜை அறையில் 5, 9 என்ற எண்ணிக்கையில் விளக்கு ஏற்ற வேண்டும். வீடு முழுவதும் தீபம் ஏற்றுவது மிக சிறந்தது. இதனால் தெய்வங்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
ஸ்ரீராமர், வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய தினம், ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தி திதி. இந்த நாளை, “தீயாஸ்” என்று சொல்லி அகல் விளக்கு ஏற்றி கொண்டாடினார்கள். அயோத்தி மக்கள், இத்திருநாளை தீபாவளி என்றும் சொல்கிறார்கள்.
ஸ்ரீராமர் அயோத்திக்கு வந்த பிறகுதான் அயோத்தியே வெளிச்சத்தில் ஜொலித்தது. வெற்றியின் சின்னம் என்று ஜொலிக்கும் தீப ஒளியை சொல்வார்கள். அந்த தீப ஒளி, நம் இல்லத்திலும் ஜொலித்தால், காரிய தடை என்கிற இருள் நீங்கி, நம் வாழ்க்கையில் முன்னேற்றம் என்கிற வெளிச்சத்தை தந்திடும்..
அதேபோல, மாலையில் வாசலில் இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபாவளி அன்று, யமதர்மராஜன் தன் சகோதரியான யமுனைக்கு சீர் கொண்டு வருவார். அதனால் அன்று மாலை நம் இல்லத்தில் நிறைய தீபம் ஏற்றினால், தமது பூலோக வருகையை மக்கள் மகிழ்சியோடு வரவேற்கிறார்கள், அதனால் அந்த இல்லத்தில் இருக்கும் பெண்களையும் தனது சகோதரிகள் போலவே நினைத்து, அந்த குடும்பத்திற்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வார். அந்த ஆண்டு முழுவதும் துஷ்ட சம்பவங்கள் அந்த இல்லத்தில் ஏற்படாது.
அதேபோல, இனிப்பை நம் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்க வேண்டும். இதனால் ஸ்ரீமகாலட்சுமியின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
மாலையில் வடதிசையை நோக்கி குபேரனையும், ஸ்ரீ மகாலட்சுமியையும் பூஜிக்க வேண்டும். குபேரனின் ஆசியும் அருளும் கிடைக்கும்.
அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் கேதார கௌரி விரதம்
கேதார கௌரி விரதம் என்ற கேதாரரேஸ்வரரை வேண்டி, பெண்கள் நோண்பு எடுப்பார்கள். இதனால் அனைத்து செல்வ வளங்களும் கிடைக்கும். இந்த நோண்பின் பயனால்தான் பார்வதிதேவி, ஈசனின் இடது பாகத்தை பெற்றாள்.
தீபாவளியை நம் முன்னோர்கள் சொன்னது போல சாஸ்திரபடி கடைபிடியுங்கள். உங்கள் வாழ்க்கைஜொலிக்கும். எப்போதும் வெற்றிதான்.
இதன் பயனாக தூய்மையான தண்ணீருக்கு தெய்வீக சக்தி கிடைக்கிறது. அதில் நீராடுவதால் உடலில் இருக்கும் தோஷங்கள் நீங்குகிறது. விடிவதற்குள் அதிகாலையில் குளித்து விட வேண்டும் சூரிய உதயத்திற்கு பின்னர் அமாவாசையின் சக்தி அதிகரிக்கும். அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளித்தால், பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாவோம். இதனால் ஸ்ரீமகாலட்சுமி யும், திருமாலும் நம் மேல் கருணை காட்ட மாட்டார்கள் என்று ஒரு கருத்து உண்டு. எனவே தோஷங்கள் விலக வேண்டுமானால் அதிகாலை 5 மணிக்கெல்லாம் குளித்து விடுங்கள்.
அதுபோல, நண்லெண்ணையை கண்டிப்பாக தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் சனிஸ்வர பகவானின் பிடியில் இருந்தும் தப்பிப்போம். இது ஏழ்மையை விரட்டும்.
துஷ்ட சக்தியை விரட்டும் பட்டாசு
பட்டாசு வெடிப்பதால் துஷ்டசக்திகள் விலகும். அதனால்தான் சில ஆலயங்களில் வெடி வெடிப்பார்கள். இதனால் துஷ்ட சக்திகள் விலகும்.
தோஷத்தை நீக்கும் மஞ்சள்
தீபாவளி தினத்தன்று புது உடை உடுத்தும்போது கண்டிப்பாக மிகச் சிறிய அளவில் மஞ்சள் வைத்த பிறகே அந்த புத்தாடையை உடுத்த வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கும்.
வாழ்வை வெளிச்சமாக்கும் தீப ஒளி
தீப திருநாள் அன்று இல்லத்தில் விளக்கு ஏற்ற வேண்டும். நம் வீட்டு பூஜை அறையில் 5, 9 என்ற எண்ணிக்கையில் விளக்கு ஏற்ற வேண்டும். வீடு முழுவதும் தீபம் ஏற்றுவது மிக சிறந்தது. இதனால் தெய்வங்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
ஸ்ரீராமர், வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய தினம், ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தி திதி. இந்த நாளை, “தீயாஸ்” என்று சொல்லி அகல் விளக்கு ஏற்றி கொண்டாடினார்கள். அயோத்தி மக்கள், இத்திருநாளை தீபாவளி என்றும் சொல்கிறார்கள்.
ஸ்ரீராமர் அயோத்திக்கு வந்த பிறகுதான் அயோத்தியே வெளிச்சத்தில் ஜொலித்தது. வெற்றியின் சின்னம் என்று ஜொலிக்கும் தீப ஒளியை சொல்வார்கள். அந்த தீப ஒளி, நம் இல்லத்திலும் ஜொலித்தால், காரிய தடை என்கிற இருள் நீங்கி, நம் வாழ்க்கையில் முன்னேற்றம் என்கிற வெளிச்சத்தை தந்திடும்..
அதேபோல, மாலையில் வாசலில் இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபாவளி அன்று, யமதர்மராஜன் தன் சகோதரியான யமுனைக்கு சீர் கொண்டு வருவார். அதனால் அன்று மாலை நம் இல்லத்தில் நிறைய தீபம் ஏற்றினால், தமது பூலோக வருகையை மக்கள் மகிழ்சியோடு வரவேற்கிறார்கள், அதனால் அந்த இல்லத்தில் இருக்கும் பெண்களையும் தனது சகோதரிகள் போலவே நினைத்து, அந்த குடும்பத்திற்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வார். அந்த ஆண்டு முழுவதும் துஷ்ட சம்பவங்கள் அந்த இல்லத்தில் ஏற்படாது.
அதேபோல, இனிப்பை நம் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்க வேண்டும். இதனால் ஸ்ரீமகாலட்சுமியின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
மாலையில் வடதிசையை நோக்கி குபேரனையும், ஸ்ரீ மகாலட்சுமியையும் பூஜிக்க வேண்டும். குபேரனின் ஆசியும் அருளும் கிடைக்கும்.
அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் கேதார கௌரி விரதம்
கேதார கௌரி விரதம் என்ற கேதாரரேஸ்வரரை வேண்டி, பெண்கள் நோண்பு எடுப்பார்கள். இதனால் அனைத்து செல்வ வளங்களும் கிடைக்கும். இந்த நோண்பின் பயனால்தான் பார்வதிதேவி, ஈசனின் இடது பாகத்தை பெற்றாள்.
தீபாவளியை நம் முன்னோர்கள் சொன்னது போல சாஸ்திரபடி கடைபிடியுங்கள். உங்கள் வாழ்க்கைஜொலிக்கும். எப்போதும் வெற்றிதான்.