ஆன்மிகம்
குலசை முத்தாரம்மன்

நவக்கிரகம், தாலி தோஷம் நீக்கும் குலசை முத்தாரம்மன்

Published On 2019-10-15 05:30 GMT   |   Update On 2019-10-15 05:30 GMT
குலசை முத்தாரம்மனை தரிசிப்பதன் மூலம் நாகதோஷம், தாலி தோஷம் நீங்குகிறது. திருமணம் கைகூடுகிறது. புத்திர பாக்கியம் கிடைக்கிறது.
குலசை முத்தாரம்மன் வேண்டி வரும் பக்தர்களை காத்து ரட்சித்து வருகிறார். ஞானமூர்த்தீஸ்வரருடன் அம்பாளை ஒரே பீடத்தில் அருட்காட்சி தருகிறாள். இந்த அம்சம் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. இந்த கோலத்தில் அம்பாளை தரிசிப்பதன் மூலம் நாகதோஷம், தாலி தோஷம் நீங்குகிறது. திருமணம் கைகூடுகிறது. புத்திர பாக்கியம் கிடைக்கிறது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு முன் மண்டபத்திற்கு மேற்கு பக்கம் நவக்கிரகங்கள் உள்ள தனி கோவில் உள்ளது. நவ கிரகங்களை வழிபட்டால் பல்வேறு பலன்கள் கிடைக்கிறது.

சூரியன்: உடல் ஆரோக்கியம் வழங்கும்
சந்திரன்: புகழ், கீர்த்தியை கொடுக்கும்
செவ்வாய்: தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும்
புதன்: அறிவு வளத்தை பெருக்கும்
குரு: மதிப்பையும், மரியாதையையும் கூட்டும்
சுக்ரன்: அழகையும், ஆற்றல் மிகுந்த பேச்சையும் தரும்
சனி: ரோகத்தை தவிர்க்கும். இழப்பை ஈடுசெய்யும்
ராகு: பயத்தை போக்கும்
கேது: பாரம்பரியத்தை வளர்க்கும்
Tags:    

Similar News