ஆன்மிகம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்

சந்திர தோஷம் போக்கும் பரிகாரம்

Published On 2019-10-14 06:36 GMT   |   Update On 2019-10-14 06:52 GMT
சந்திரன் தோஷம் (திங்கட்கிழமை) உள்ளர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகார முறையை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஸ்ரீஞானமூர்த்தீஸ்வரரோ ஞானத்தையே திருமேனியாகக் கொண்டவர் உலக உயிர்களுக்கு ஞானம் அருள்பவர். இங்கே அம்பாளின் ஆற்றலை பெற்று சக்தி மயமாக சுவாமியும், சுவாமி ஆற்றலைப் பெற்று சக்தி சிவமயமாகவும் அமர்ந்து இருப்பதால் பரிவர்த்தனை யோகத்தில் நவகிரக நாயகி அருள்பாலிக்கிறாள்.

சந்திரன் மாத்ரு காரகன். தாய்வழி உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகள், தாயின் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படுவதால், தாய் வழி சொத்தில் இழுபறி, புகழ், கல்வி, பதவி உயர்வுகளின் தடை போன்ற பாதிப்புகள் தோன்றலாம்.

சந்திரதோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?

சந்திர தோஷம் இருந்தால் திங்கட்கிழமை காலை குலசேகரபட்டினம் கடலில் குளித்து விட்டு வரும் வழியில் உள்ள சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்மாளை தரிசித்து விட்டு முத்தாரம்மனுக்கு இடது பக்கம் உள்ள துர்க்கைக்கு நெய் விளக்கு ஐந்து தீபம் ஏற்றுங்கள்.

முத்தாரம்மனுக்கு கற்கண்டு சாதம் படைத்து அங்கு இருக்கும் பக்தர்களுக்கு தானம் செய்யுங்கள். பின்பு முத்தாரம்மனை தரிசித்தால் சந்திரதோஷம் உங்களை சங்கடப்படுத்தாமல் ஒடும்.
Tags:    

Similar News