ஆன்மிகம்
திருப்பதிசாரம் திருவாழ்மார்பன்

குழந்தை பாக்கியம், திருமண தடை நீக்கும் திருப்பதிசாரம் திருவாழ்மார்பன்

Published On 2019-10-10 05:40 GMT   |   Update On 2019-10-10 05:40 GMT
திருப்பதிசாரம் திருவாழ்மார்பனை வழிபட்டால் நோய், நொடிகள் நீங்கும், குழந்தையில்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
திவ்யதேசங்கள் எனப்படும் 108 வைணவ தலங்களில் குமரி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் உள்ள மூலவர் வலது காலை மடக்கி இடது காலை தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறார். நம்மாழ்வாரின் தாய், நம்மாழ்வாரை ஈன்ற 41-ம் நாள் (வைகாசி விசாகத்தன்று நம்மாழ்வார் பிறந்தார்) குருகூரிலுள்ள ஆதிநாதன் சன்னதியில் இட்டார். அந்த குழந்தை மெல்லத்தவழ்ந்து கோவிலிலுள்ள புளியமரப் பொந்திற்குள் புகுந்தது.

இதைக் கண்டு அனைவரும் வியந்தது நிற்க, பொந்தில் இருந்து குழந்தை யோக முத்திரையுடன் பத்மாசன யோகத்தில் அமர்ந்து மதுரகவி ஆழ்வாருக்கு திருவாய்மொழி அருளியதாக தல புராணம். இந்த இடத்தில்தான் ஆஞ்சநேயரின் பிரார்த்தனைக்கு இணங்க அகஸ்தியர் ராமாயணம் அருளியதாகவும் சொல்லப்படுகிறது. பெற்றோர்கள் இம்சையில் இருந்து விடுபட, பாவங்களில் இருந்து குடும்பத்தைக் காப்பாற்ற வறுமையில் இருந்து தப்ப, ஆரோக்கியத்தை குலைக்கும் நோய்களில் இருந்து விலக திருப்பதி சாரம் வந்து நம்மாழ்வாரை ஆட்கொண்ட திருக்குறளப்பன் சன்னதியில் மனமுருகி பிரார்த்தனை செய்தால் போதும்.

திருவாழ்மார்பனை வழிபட்டால் நோய், நொடிகள் நீங்கும், குழந்தையில்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

திருப்பதிசாரம் கோவிலுக்கு செல்ல நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது. ரெயிலில் வருபவர்கள் அங்கிருந்தே கோவிலுக்கு செல்ல ஆட்டோ, கார் வசதியும் உள்ளது. இல்லாவிட்டால் அண்ணா பஸ்நிலையம் வந்து பஸ்சில் சென்று திருவாழ்மார்பனை தரிசிக்கலாம்.

கோவில் போன்: 04652- 282495.
Tags:    

Similar News