ஆன்மிகம்
வரதராஜபெருமாள்

27 நட்சத்திர தோஷங்கள் நீங்கும் திருத்தலம்

Published On 2019-10-09 07:05 GMT   |   Update On 2019-10-09 07:05 GMT
ஸ்ரீ பெருந்தேவிதாயார் சமேத வரதராஜபெருமாள் கோவிலில் பிரதி மாதம் சுவாதி நட்சத்திரம், மூல நட்சத்திரம் ஆகிய நட்சத்திர நாட்களில் 27 நட்சத்திர தோஷங்கள் நீங்குவதற்கு மகாயாகம் நடத்தப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா, பெரணமல்லூர் ஒன்றியம், இஞ்சிமேடு கிராமத்தில், ஸ்ரீ பெருந்தேவிதாயார் சமேத வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீ வரதராஜபெருமாள் தனி சன்னதி, ஸ்ரீ பெருந்தேவி தாயார் சன்னதி, கல்யாண லட்சுமி நரசிம்மர் சன்னதி, ராமர், லட்சுமணர், சீதாதேவி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் தனி சன்னதிகள் உள்ளன.

இதுபோல் 5 நிலை கொண்ட ராஜகோபுரம், சக்கரத்தாழ்வார் சன்னதி, அலமேலு மங்கை தாயார் சன்னதி, நாகதோஷம் நீங்கும் சன்னதி ஆகியவை கட்டும் கட்டிட திருப்பணிகள் நடந்து வருகிறது. ஸ்ரீ ரங்கசடகோப கட்டிட திருப்பணிகள் மற்றும் கொடி மரம் ஏற்பாடு செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஸ்ரீரங்க சடகோப கைங்கரிய சபா நிர்வாகி E.N. வரதராஜன் என்ற பாலாஜியின் முயற்சியால் திருப் பணிகள் நடந்தது.

தோஷங்கள் நீங்கும் திருத்தலம்

பிரதி மாதம் சுவாதி நட்சத்திரம், மூல நட்சத்திரம் ஆகிய நட்சத்திர நாட்களில் 27 நட்சத்திர தோஷங்கள் நீங்குவதற்கு மகாயாகம் நடத்தப்படுகிறது. இதில் திருமணத்தடை, வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம், உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் பல்வேறு நன்மைக்காகவும் யாகம் நடத்தப்படுகிறது.

பிரதிமாதம் உத்திரம் நட்சரத்தில் கோ சாலையில் உள்ள பசுக்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதில் வியாபாரம், திருமணநாள், பிறந்த நாள், குழந்தை வரம், பெயர் சூட்டுதல், நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும் முன்பதிவு செய்து கொண்டு கோ பூஜையில் கலந்து கொண்டு வழிபடலாம்.

முக்கிய திருவிழா

இந்த கோவிலில் புத்தாண்டு திருவிழா, தைமாத திருவிழா, திருப்பாவாடை அன்னக்கூடை திருவிழா, பவுத்திர உற்சவம், திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, கருடசேவை, கிருஷ்ணஜெயந்தி ஆகிய முக்கிய விழாக்களாக நடக்கின்றன. மேலும் இந்த கோவிலில் உள்ள ராமர், லட்சுமணர், சீதாதேவி சன்னதியில் பரத்வாஜ் முனிவரால் வழிபாடு செய்யப்பட்ட திருத்தலம். ராமர், லட்சுமணர் வைத்திருக்கும் வில்லில் மேல்புறத்தில் நரசிம்மர் திருஉருவம் உள்ளதால், வணங்கி செல்லும் பக்தர்களுக்கு நன்மைகள் நடக்கிறது.

பெருந்தேவி தாயார் சிறப்பு

பல்வேறு கோரிக்கைகளை பெருந்தேவி தாயாரிடம் வைத்து மண் அகல்விளக்கில் தீபம்ஏற்றி 48 நாள் மஞ்சள் வைத்து வணங்கி வந்தால் நன்மைகள் நடக்கும்.

இஞ்சிமேட்டை சேர்ந்த ஸ்ரீ சடகோபராமாஜர் தேசிகன், ஸ்ரீரங்க சடகோப யதீந்த்ர தேசிகன் அகோபலி மடத்தின் 34-வது பட்டம் மற்றும் 42-வது பட்டம் வகித்தார்கள். ஆன்மிக பணிகள் செய்தார்கள்.

அமைவிடம்


வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள சின்னகொழப்பலூரில் இறங்கி இஞ்சிமேட்டிற்கு செல்ல லாம்.

ஆரணி-வந்தவாசி சாலையில் உள்ள சட்டதாங்கல் கூட்ரோடு பெரணமல்லூர் வழியாக இஞ்சிமேட்டிற்கு செல்லலாம்.

சென்னையில் இருந்து 148, 208, 422, 341, 130, 247 காஞ்சீபுரத்திலிருந்து மேல்மலையனூர் செல்லும் வழி, வந்தவாசி-பெங்களூரு அரசு பஸ்சில் இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லலாம்.
Tags:    

Similar News