ஆன்மிகம்
வழக்கறுத்தீசுவரர்

வழக்குகளை தீர்த்து வைக்கும் வழக்கறுத்தீசுவரர்

Published On 2019-08-20 08:08 GMT   |   Update On 2019-08-20 08:10 GMT
கோர்ட்டு வழக்கு விவகாரங்களில் சிக்கி தவிப்பவர்கள் வழக்கறுத்தீசுவரர் திருக்கோவிலுக்கு வந்து பரிகார பூஜைகள் செய்து பலன் பெறுகிறார்கள்.
அருள்மிகு வழக்கறுத்தீசுவரர் கோவில் மத்திய காஞ்சியில் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கிழக்கும், காந்திசாலைக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது.

முனிவர்களுக்கும், தேவர்களுக்கும், இடையே ஏற்பட்டு பிரச்சினையை - வழக்கினை இறைவனே நேரில் வந்து தீர்த்து வைத்ததால் இத்தலத்து இறைவன் வழக்கறுத்தீசுவரர் எனப் பெயர் பெற்றார். வழக்கு விவகாரங்களில் சிக்கி தவிப்பவர்கள் இத்தலத்துக்கு வந்து பரிகார பூஜைகள் செய்து பலன் பெறுகிறார்கள்.

மேலும் இத்தலத்து ஈசனை 16 தீபம் ஏற்றி, 16 முறை வலம் வந்து, 16 வாரம் தொடர்ந்து அன்னதானம் செய்தால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

மேலும் தகவல்களை குணாளனிடம் 9677728677 என்ற எண்ணில் பெறலாம்.
Tags:    

Similar News