ஆன்மிகம்
பவானி சங்கமேஸ்வரர் கோவில்

பாவம் போக்கும் பவானி சங்கமேஸ்வரர் கோவில்

Published On 2019-08-14 07:36 GMT   |   Update On 2019-08-14 07:36 GMT
பவானி கூடுதுறை பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி கொண்டதாக விளங்குவதால் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் அங்கு நீராடி பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.
தமிழகம் முழுவதும் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் ஒரு சில கோவில்களை மட்டுமே பரிகார ஸ்தலங்களாக முன்னோர்கள் வகுத்துள்ளனர். பவானி கூடுதுறை சங்கமம் பாவங்களை வேரோடுகளையும் தன்மை பெற்றது ஆகும். இங்குள்ள அரசமரத்தடியில் உள்ள விநாயகர் வினை தீர்க்கும் வல்லமை வாய்ந்தவராக உள்ளார். அவருக்கு கூடுதுறை நீரை எடுத்து அபிஷேகம் செய்தால் திருமணம் கைக்கூடும் என்பதால் கன்னி பெண்கள் கூடுதுறையில் நீராடி விநாயகருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

பவானி கூடுதுறை பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி கொண்டதாக விளங்குவதால் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் அங்கு நீராடி பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

இங்கு ஒருமுறை குளித்து சென்றால் அவர் முக்தி அடைந்து விடுவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
Tags:    

Similar News