ஆன்மிகம்
தாடிக்கொம்பு பெருமாள் கோவில்

கடன் பிரச்சனை தீர்க்கும் கோவில்

Published On 2019-08-07 04:28 GMT   |   Update On 2019-08-07 04:28 GMT
தாடிக்கொம்பு சவுந்தர்ராஜ பெருமாள் கோவில் வைபவத்தில் கலந்து கொண்டு பெருமாளை வழிபடுவதால் வாழ்வில் ஏற்படுகின்ற கடனால் ஏற்படும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் அதிகரிக்கும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வேடச்சந்தூர் அருகில் இருக்கும் தாடிக்கொம்பு எனும் ஊரில் இருக்கும் புகழ் பெற்ற பழமையான ஆலயம் தான் தாடிக்கொம்பு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்.

தாடிக்கொம்பு சவுந்தர்ராஜ பெருமாள் கோவில் வைபவத்தில் கலந்து கொண்டு பெருமாளை வழிபடுவதால் வாழ்வில் ஏற்படுகின்ற கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் அதிகரிக்கும். இன்றைய தினம் சுவாதி நட்சத்திரம் ஆகும். சுவாதி நட்சத்திரம் என்பது நரசிம்ம மூர்த்தியின் அவதார நட்சத்திரம் ஆகும்.

எனவே இந்த தினத்தில் இந்த தாடிக்கொம்பு பெருமாள் கோவிலுக்கு வந்து நரசிம்ம மூர்த்திக்கு பூக்கள் மற்றும் துளசி மாலை சாற்றி, தீபமேற்றி வழிபாடு செய்வதால் தீர்க்க முடியாத கடன் பிரச்சனையில் இருந்து மீள முடியும். மனநிலை பாதிப்பு சித்தபிரம்மை பாதிக்கப்பட்டவர்களின் நோய்கள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும்.
Tags:    

Similar News