ஆன்மிகம்
திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி

திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் யோகம் பெற பரிகாரம்

Published On 2019-07-12 08:08 GMT   |   Update On 2019-07-12 08:08 GMT
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் மிகுதியான யோகங்களை பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ராகு பகவானுக்குரிய ஒரு அற்புத நட்சத்திரமாக திருவாதிரை நட்சத்திரம் இருக்கிறது. அந்த திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் மிகுதியான யோகங்களை பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் ஜென்ம நட்சத்திர தினத்தன்று தஞ்சை மாவட்டத்திலிருக்கும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலுக்கு சென்று, சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

பிறகு அங்கிருக்கும் ராகு பகவானின் பாலாபிஷேக பூஜைக்கு, பால் தானம் தந்து வழிபாடு செய்வதால் உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்பட்டிருக்கும் ராகு கிரகத்தின் தோஷங்கள் அனைத்தும் நீங்கும். தினமும் காலை எழுந்து குளித்து முடித்ததும் சிவபெருமானுக்குரிய ருத்ர மகாமந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்து வழிபடுவது உங்கள் வாழ்வில் நன்மைகள் அதிகம் ஏற்பட செய்யும்.

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தலவிருட்சமாக செங்காலி மரம் இருக்கிறது. செங்காலி மரம் தல விருட்சமாக இருக்கும் கோவில்களுக்கு சென்று செங்காலி மரத்தையும், அங்கிருக்கும் இறைவனையும் வழிபடுவது உங்களின் அனைத்து வகையான தோஷங்களையும் நீக்கி, நன்மைகளை கிடைக்கச் செய்யும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் யாரேனும் ஒருவருக்கு ஆடைகள், புற்று நோய் குணமாக மருந்துகள் வாங்கித் தருவது ராகுபகவானின் மனம் குளிரச் செய்து உங்களுக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கச் செய்யும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.
Tags:    

Similar News