ஆன்மிகம்
பாலாரிஷ்டம் என்ற சொல்லிற்கு சிறுவயதில் இறப்பது அல்லது சிறு வயதில் உடல்ரீதியாகத் கெடுவது என்ற பொருள். இந்த தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் உள்ளது.
பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 6,8,12-ம் இடங்களில் குரு கிரகம் நின்றாலும் அல்லது சூரியன், சந்திரன் நின்றாலும் 8-ம் இடமான ஆயுள் தானத்தில் ஆயுள் காரகன் சனி நின்றாலும் அது பாலாரிஷ்ட தோஷமாகும். இந்த குழந்தைகளுக்கு நோய் நொடிகளே பிறந்த காலத்திலிருந்து 1 அல்லது 2 ஆண்டுகள் வரை தரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
பாலாரிஷ்டம் என்ற சொல்லிற்கு சிறுவயதில் இறப்பது அல்லது சிறு வயதில் உடல்ரீதியாகத் கெடுவது என்ற பொருள். பிறந்த குழந்தை உயிருடன் இருக்குமா? எத்தனை காலம் இருக்கும்? இந்தக் குழந்தை பிறப்பினால் தாய்க்கும் ஏதாவது கஷ்டங்கள் இருக்குமா என்பதை பாலாரிஷ்ட தோஷம் சுட்டிக் காட்டும்.
அன்றைய காலகட்டத்தில் குழந்தை பிழைத்திருக்குமா, தாயும் உயிருடன் இருப்பாளா என்பதை கணிப்பதற்காக ஜோதிடத்தில் சில வழிமுறைகள் சொல்லப்பட்டன. சுருக்கமாக சந்திரன் வலுவுடன் இருக்கும் நேரத்தில் பிறந்த குழந்தைகள் ஆயுள்பலம் உள்ளவனாகவும், சுகப் பிரசவமாகவும், தாய்க்கும் நன்மைகளைச் செய்வதாகும் அமைப்பில் இருப்பதாக சொல்லப்பட்டது.
சந்திரன் பாபக் கிரகங்களுடன் இணைந்து, தேய்பிறைச் சந்திரனாகவோ அமாவாசையன்றோ, கிரகண அமைப்பிலோ பிறக்கும் குழந்தைகளுக்கு பாலாரிஷ்டம் என்கின்ற ஆயுள் தோஷம் உண்டாகி அதனுடைய தாயாரும் அதன் குழந்தைப் பருவத்திலேயே மரணமடைவார் என்பது விதி.
பரிகாரம்
இந்த தோஷம் நீங்க மிருத்யுஞ் ஹோமம், அல்லது பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு, லட்சுமி நரசிம்மர் வழிபாடு இயற்றலாம், அல்லது ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டு செய்யலாம். விஷ்ணு சகஸ்வரநாமம் லலிதா நாமம் பாராயணம் செய்து வரலாம். இந்த மந்திரத்தை வழிபட்டு விபூதியை குழந்தையின் நெற்றியில் பூசலாம்.
பாலாரிஷ்டம் என்ற சொல்லிற்கு சிறுவயதில் இறப்பது அல்லது சிறு வயதில் உடல்ரீதியாகத் கெடுவது என்ற பொருள். பிறந்த குழந்தை உயிருடன் இருக்குமா? எத்தனை காலம் இருக்கும்? இந்தக் குழந்தை பிறப்பினால் தாய்க்கும் ஏதாவது கஷ்டங்கள் இருக்குமா என்பதை பாலாரிஷ்ட தோஷம் சுட்டிக் காட்டும்.
அன்றைய காலகட்டத்தில் குழந்தை பிழைத்திருக்குமா, தாயும் உயிருடன் இருப்பாளா என்பதை கணிப்பதற்காக ஜோதிடத்தில் சில வழிமுறைகள் சொல்லப்பட்டன. சுருக்கமாக சந்திரன் வலுவுடன் இருக்கும் நேரத்தில் பிறந்த குழந்தைகள் ஆயுள்பலம் உள்ளவனாகவும், சுகப் பிரசவமாகவும், தாய்க்கும் நன்மைகளைச் செய்வதாகும் அமைப்பில் இருப்பதாக சொல்லப்பட்டது.
சந்திரன் பாபக் கிரகங்களுடன் இணைந்து, தேய்பிறைச் சந்திரனாகவோ அமாவாசையன்றோ, கிரகண அமைப்பிலோ பிறக்கும் குழந்தைகளுக்கு பாலாரிஷ்டம் என்கின்ற ஆயுள் தோஷம் உண்டாகி அதனுடைய தாயாரும் அதன் குழந்தைப் பருவத்திலேயே மரணமடைவார் என்பது விதி.
பரிகாரம்
இந்த தோஷம் நீங்க மிருத்யுஞ் ஹோமம், அல்லது பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு, லட்சுமி நரசிம்மர் வழிபாடு இயற்றலாம், அல்லது ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டு செய்யலாம். விஷ்ணு சகஸ்வரநாமம் லலிதா நாமம் பாராயணம் செய்து வரலாம். இந்த மந்திரத்தை வழிபட்டு விபூதியை குழந்தையின் நெற்றியில் பூசலாம்.