ஆன்மிகம்

திருவக்கரை ஆலயத்தில் 6 விதமான பரிகாரங்கள்

Published On 2019-01-01 06:00 GMT   |   Update On 2019-01-01 06:00 GMT
திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவிலில் 6 விதமான பரிகாரங்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
திருவக்கரை ஆலயத்தில் மூலஸ்தானத்து இறைவன் முகலிங்கமாகக் காட்சி அளிக்கின்றார். இந்த ஆலயத்தில் உள்ள வக்கிர லிங்கம் எதிரே உள்ள மணலில் புதைந்து காணப்படும் நந்திக்கு மஞ்சள் குங்குமம் பூமி வழிபாடு செய்தால், அவர் மூலம் சிவன் அருளை பெற முடியும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. எனவே சிவனிடம் செய்ய வேண்டிய பரிகாரங்களை இந்த நந்தி மூலம் பக்தர்கள் செய்கிறார்கள்.

பவுர்ணமி தோறும் தீப கொப்பரையில் தீபம் ஏற்றுகிறார்கள். 3 பவுர்ணமி இந்த தீபத்தை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

குழந்தை பேறு வேண்டி காளியம்மன் சன்னதி பின்புறம் தொட்டில் கட்டும் வழக்கம் உள்ளது.

திருமணத்திற்காக பெண்கள் இந்த மரத்தில் மஞ்சள் கயிறு கட்டும் வழக்கம் உள்ளது.

கடன் பிரச்சினை, வழக்குகள், மாமியார் கொடுமை ஆகியவை நீங்குவதற்கு பூட்டு போடும் பரிகாரம் செய்கின்றனர்.

நாகதோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
Tags:    

Similar News