ஆன்மிகம்

தீபம் ஏற்றினால் அங்காரக தோஷம் விலகும்

Published On 2017-10-02 01:58 GMT   |   Update On 2017-10-02 01:58 GMT
அங்காரக பகவானுக்குச் செவ்வாய்க்கிழமையில் அபிஷேகம் செய்து கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்தால் அங்காரக கிரகதோஷம் நீங்கும்.
அங்காரக பகவானுக்குச் செவ்வாய்க்கிழமையில் அபிஷேகம் செய்வித்துச் சிவப்பு வஸ்திரம், பவழம், சிவப்பு அலரி என்பவற்றால் அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை ஓதி கருங்காலிச் சமித்தினால் யாகத்தீயை எழுப்பித் துவரம் பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

பிறகு தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சுருட்டி ராகத்தில் அங்காரக கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.

இப்படிச் செய்தால் அங்காரக கிரகதோஷம் நீங்கும்.
Tags:    

Similar News