ஆன்மிகம்

ராகு - கேதுக்கு தீபம் ஏற்றினால் ஜோடி சேரலாம்

Published On 2017-07-27 05:50 GMT   |   Update On 2017-07-27 05:50 GMT
ராகு - கேது தோஷத்தால் திருமணம் தடை படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள உரிய பரிகாரத்தை செய்து வந்தால் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
ராகு-கேதுக்களுக்கு நடுவில் கிரகங்கள் சிக்கியிருந்தால் கால சர்ப்ப தோஷமாகும். சர்ப்ப தோஷத்தின் பிடியில் சிக்கியிருந்தால் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி திருமணத் தடைகள் அதிகம் ஏற்படும்.

அவர்கள் ராகு காலத்தில் துர்க்கை வழிபாட்டையும், அதோடு இணைந்து கேதுவிற்கு விநாயகர் வழிபாட்டையும் முறைப்படி மேற்கொண்டு வரவேண்டும். ஜோடி தீபம் ஏற்றினால் ஜோடி சேரும் வாய்ப்பு கண்டிப்பாக உருவாகும்.

சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்தால் தடைகள் விலகும்.
Tags:    

Similar News