ஆன்மிகம்
சர்ப்ப தோஷம் போக்கும் நாகேஸ்வரமுடையார்
சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் நாகேஸ்வரமுடையார் கோவிலுக்கு வந்து முறையாக பரிகாரம் செய்தால் தோஷத்தின் வீரியம் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ராகுவும் கேதுவும் தவமிருந்து, இறைவனை வழிபட்டு கிரகப் பதவியை அடைந்தனர். அந்த இறைவன் பெயர் நாகேஸ்வரமுடையார், இறைவி புன்னாக வல்லி. இவர்கள் அருள்பாலிக்கும் ஆலயம் சீர்காழியில் உள்ள நாகேஸ்வரமுடையார் கோவில்.
இந்த ஆலயத்தில் தினமும் இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும். இங்கு ஞாயிறு அன்று நடைபெறும் பரிகார பூஜை சிறப்பு வாய்ந்தது. ராகு, கேது சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.
ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமி அன்று நாகேஸ்வரமுடையாருக்கு, 150 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அபிஷேகம் அன்னத்தை பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர்.
பிரதி ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் இங்கு சுவாமி, அம்மன் மற்றும் ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் நடைபெறுகிறது. ஜாதகத்தில் ராகு தோஷம் உள்ளவர்கள் ராகு, கேது சன்னிதிகளை இடதுபுறம் 9 முறையும், வலதுபுறம் 3 முறையும் அடி பிரதட்சணம் செய்கின்றனர். இப்படி 11 வாரம் செய்வதால் தோஷ நிவர்த்தி ஏற்படுகிறது என்று நம்புகின்றனர்.
ராகு தோஷம் உள்ளவர்கள் உளுந்து தானியம் மீதும், கேது தோஷம் உள்ளவர்கள் கொள்ளு தானியம் மீதும் தீபம் ஏற்றி வழிபட, தோஷத்தின் வீரியம் குறையும் என்று நம்புகின்றனர் பக்தர்கள்.
நாகை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ தொலைவில் கடை வீதியில் உள்ளது இந்த ஆலயம்.
இந்த கோவில் பற்றிய தகவல் அறிய இந்த எண்ணில் தொடர்ப்பு கொள்ளலாம்: 9443785862
இந்த ஆலயத்தில் தினமும் இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும். இங்கு ஞாயிறு அன்று நடைபெறும் பரிகார பூஜை சிறப்பு வாய்ந்தது. ராகு, கேது சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.
ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமி அன்று நாகேஸ்வரமுடையாருக்கு, 150 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அபிஷேகம் அன்னத்தை பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர்.
பிரதி ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் இங்கு சுவாமி, அம்மன் மற்றும் ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் நடைபெறுகிறது. ஜாதகத்தில் ராகு தோஷம் உள்ளவர்கள் ராகு, கேது சன்னிதிகளை இடதுபுறம் 9 முறையும், வலதுபுறம் 3 முறையும் அடி பிரதட்சணம் செய்கின்றனர். இப்படி 11 வாரம் செய்வதால் தோஷ நிவர்த்தி ஏற்படுகிறது என்று நம்புகின்றனர்.
ராகு தோஷம் உள்ளவர்கள் உளுந்து தானியம் மீதும், கேது தோஷம் உள்ளவர்கள் கொள்ளு தானியம் மீதும் தீபம் ஏற்றி வழிபட, தோஷத்தின் வீரியம் குறையும் என்று நம்புகின்றனர் பக்தர்கள்.
நாகை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ தொலைவில் கடை வீதியில் உள்ளது இந்த ஆலயம்.
இந்த கோவில் பற்றிய தகவல் அறிய இந்த எண்ணில் தொடர்ப்பு கொள்ளலாம்: 9443785862