ஆன்மிகம்

அனுமனை வழிபாட்டால் தீரும் பிரச்சனைகள்

Published On 2017-06-14 09:44 IST   |   Update On 2017-06-14 09:44:00 IST
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால், வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். மேலும் அனுமனை வழிபாட்டால் தீரும் பிரச்சனைகளை பார்க்கலாம்.
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால், வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். துளசி மாலை சூட்டி வேண்டிக்கொண்டால், ஆரோக்கியம் சீராகும். வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்தால் வேண்டியது கிடைக்கும்.

குறிப்பாக குழந்தை பாக்கியம் கிட்டும். ராமஜெயம் எழுதிய மாலை அணிவித்தால் சகல யோகமும் வந்து சேரும். மேலும் ஆஞ்சநேயரை இரட்டைப் படை எண்ணிக்கையில் வலம் வந்தால் இருமடங்கு லாபம் கிடைக்கும். அடிப்பிரதட்சணம் செய்தால் திருமணத் தடை அகலும். ஆஞ்சநேயர் கவசம் பாடினால் கனவுகள் நனவாகும்.

Similar News