ஆன்மிகம்

ராகு - கேதுக்கு எப்போது பரிகாரம் செய்ய வேண்டும்?

Published On 2017-06-08 09:30 GMT   |   Update On 2017-06-08 09:30 GMT
ராகு-கேது தோஷம் ஏன் ஏற்படுகிறது என்பதற்கு பல விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. ராகு-கேதுக்கு எப்போது பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
ஒருவருக்கு ராகு - கேது பரிகாரம் எப்பொழுதெல்லாம் செய்ய வேண்டும் என்று ஆராய்ந்தால்

1) சூரிய திசையில், எந்த புத்தி நடந்து கொண்டிருந்தாலும் அதில் ராகு அல்லது கேது அந்தரம் நடக்கும் பொழுதும்

2) சந்திரதிசையில் ராகு புத்தி, ராகு அந்தரம் கேது புத்தி, கேது அந்தரம் நடக்கும் பொழுதும்

3) செவ்வாய் திசையில் ராகு புத்தி, கேது அந்தரம் நடக்கும் பொழுதும்

4) ராகு திசையில் ராகு புத்தி, கேது புத்தி நடக்கும் பொழுதும் (இதில் சந்திர புத்தியும், கண்டிப்பாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது நியதி)

5) குரு திசையில், கேது புத்தி ராகு புத்தி நடக்கும் பொழுதும்.

6) சனி திசையில் ராகு, கேது புத்தி-சூரிய புத்தியில் ராகு, கேது அந்தரம் நடக்கும் பொழுதும்

7) புதன் திசையில் சந்திர-புத்தி, ராகு-கேது அந்தரம் நடக்கும் பொழுதும்

8)கேது திசையில் சந்திர புத்தி சூரிய புத்தி, புதன் புத்தியில் ராகு-கேது அந்தரம் நடக்கும் பொழுதும்

9) சுக்கிர திசையில் குருபத்தி-கேது ராகு அந்தரம் நடக்கும் பொழுதும் - மேற்படி பரிகாரங்கள் செய்வது மிகப்பெரிய நன்மையை அடையலாம்...



ராகு காலம் :

ராகு ஒவ்வொரு நாளிலும் வலிமைபெறும் காலம் 1.30 மணி ஆகும்.

ஞாயிறு    4.30    முதல்    6.00    வரை

திங்கள்     7.30    முதல்    9.00    வரை

செவ்வாய்    3.00    முதல்    4.30    வரை

புதன்    12.00    முதல்    1.30    வரை

வியாழன்    1.30    முதல்    3.00    வரை

வெள்ளி    10.30    முதல்    12.00    வரை

சனி    9.00    முதல்    10.30    வரை

இக்காலம் சுபகாரியம் செய்ய சிறப்பாகாது.

ராகு ஆங்கில எண்.4-க்கு அதிபதியாவார் 4,13,22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ராகு ஆதிக்கம் உடையவர்கள்.
Tags:    

Similar News