ஆன்மிகம்

வாஸ்து தோஷம் நீக்கும் அனுமன்

Published On 2017-06-02 05:25 GMT   |   Update On 2017-06-02 05:25 GMT
தஞ்சாவூர் மேலவீதியும், வடக்கு ராஜவீதியும் இணையும் வடமேற்கு மூலையில் உள்ள பிரதாப வீர அனுமன் கோவில் வாஸ்து தோஷம் நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது.
தஞ்சாவூர் மேலவீதியும், வடக்கு ராஜவீதியும் இணையும் வடமேற்கு மூலையில், பிரதாப வீர அனுமன் கோவில் இருக்கிறது. வாயு மூலையில் அமைந்த ஆலயம் என்பதால், இங்கு வீற்றிருக்கும் ஆஞ்ச நேயரை ‘மூலை அனுமன்’ என்று அழைக்கிறார்கள். தஞ்சாவூர் பெரியக் கோவிலில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் மூலை அனுமன் கோவில் இருக்கிறது.

இந்த ஆலயம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. வாயு மூலையில் அமைந்த ஆலயம் என்பதால், வாஸ்து தோஷம் நீக்கும் பரிகாரத் தலமாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது. அமாவாசை நாட்களில் இந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
Tags:    

Similar News