ஆன்மிகம்

கர்ம வினைகளை போக்கும் ஈச்சங்கரணை மகா பைரவர்

Published On 2017-05-20 08:49 GMT   |   Update On 2017-05-20 08:49 GMT
ஈச்சங்கரணை மகாபைரவர் ருத்ர ஆலயத்தை ஆண்டுக்கு ஒரு தடவை வந்து வழிபட்டாலே ஒருவரது ஆத்மா சுத்தமாகி அவருக்கு கிடைக்க வேண்டிய எல்லா பலன்களும் கிடைத்து விடும்.
நாகர்கோவிலில் பிறந்த ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் பைரவமாக இருந்து மக்களுக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறார். பைரவத்தின் அருளை தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் பெற்று பயன் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் சென்னை அருகே மகேந்திரா சிட்டி பகுதியில் இருந்து உள் செல்லும் திருவடி சூலம் சாலையில் உள்ள ஈச்சங்கரணையில் மகாபைரவர் ருத்ர ஆலயத்தை அமைத்துள்ளார்.

சுற்றிலும் மலை சூழ்ந்திருக்க உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலயம் பஞ்ச பூதங்களும் ஆட்சி செய்யும் அருமையான தலமாக உள்ளது. சிவ ஆகம விதிகளின்படி இங்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி, பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை நாட்களில் இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

அரண்மனை கட்டிடக் கலையில் கோவில் அமைப்பு, ஆடும் கும்ப கலசம், பைரவரின் கூம்பு வடிவ கருவறை என்று இந்த ஆலயம் முழுக்க, முழுக்க மற்ற ஆலயங்களில் இருந்து வித்தியாசப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மகா பைரவ ருத்ர ஆலயத்தின் பிரதான சிறப்பு என்ன தெரியுமா? இந்த கிழமைதான் பைரவரை கும்பிட வேண்டும்.இப்படித் தான் வணங்க வேண்டும் என்று எந்த ஒரு கட்டுப்பாடோ, வரைமுறையோ இங்கு கிடையவே கிடையாது.



உங்களுக்கு எப்போது வசதிப்படுகிறதோ, அப்போது வந்து வழிபடுங்கள் என்கிறார் ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள். சிலர் பைரவருக்குஅது படைக்க வேண்டுமே.. இது செய்ய வேண்டுமே என்று நினைப்பதுண்டு. அதற்கும் ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் விளக்கம் அளித்துள்ளார்.

பைரவருக்கு ஒரு முழம் பூ வாங்கிப் போட்டாலே போதும். அவர் அருள் கிடைத்து விடும் என்கிறார். ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் இதுபற்றி கூறுகையில், “பைரவரை இயல்பான நிலையில் வணங்குங்கள். ஆனால் அவரை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டியவை எல்லாம் இடையூறு இல்லாமல் கிடைக்கும்‘’ என்கிறார்.

சில ஆலயங்களில் இத்தனை வாரம் வர வேண்டும். இன்னென்ன செய்ய வேண்டும் என்பார்கள். ஆனால் மகாருத்ர பைரவ ஆலயத்தில் அப்படியெல்லாம் சொல்வதில்லை. அதற்கு மாறாக ஆண்டுக்கு ஒரு தடவை இத்தலத்தில் காலடி எடுத்து வைத்து விட்டுச் சென்றாலே போதும் என்கிறார்கள்.

ஆண்டுக்கு ஒரு தடவை வந்து வழிபட்டாலே ஒருவரது ஆத்மா சுத்தமாகி அவருக்கு கிடைக்க வேண்டிய எல்லா பலன்களும் கிடைத்து விடும் என்று ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் அருளியுள்ளார். எனவே இது இந்த தலத்துக்கு உரிய தனித்துவமாக உள்ளது. அதன்படி பார்த்தால் மகா ருத்ர ஆலய பைரவரை நெருங்க, நெருங்க உங்கள் கர்ம வினைகள் காணாமல் போய் விடும்.
Tags:    

Similar News