ஆன்மிகம்

கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம்

Published On 2017-04-25 05:04 GMT   |   Update On 2017-04-25 05:05 GMT
கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? கால சர்ப்ப தோஷத்திற்கான சிறந்த, விரைவில் பலன் தரும் பரிகாரம் என்ன என்பதை விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? காலத்தால் மறுக்கப்பட்டவர்கள். காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள். இதை எதிர்த்து நின்று மேலே வருகிறவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு 39 வயதிலிருந்து மிகவும் உச்சமாக இருக்கும். உச்சத்திற்கும் வருவார்கள். ஆனால் அதுவரைக்கு உண்டு இல்லை என்று ஆக்கும். குறிப்பாக 26 வயது வரை ஒரு வழியாக்கி விடும்.

அத்தகைய கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும்.

பங்குனி உத்திரம் சாஸ்தா கோவில்களில் தான் பெரும்பாலும் கொண்டாடப்படும். கோவில் ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதிகளில் காணப்படும். எனவே, தனித்து செல்லாமல் கூட்டமாகச் சென்று வழிபடுவார்கள். ‘சாத்து’ என்ற சொல்லுக்கு ‘கூட்டம்’ எனப்பெயர் வந்தது. கூட்டமாக வந்து வழிபடுவதால் இவர் சாஸ்தா எனப்பட்டார்.

Similar News