ஆன்மிகம்

பாவங்களை விலக்கும் சித்ரகுப்தன்

Published On 2017-04-21 05:43 GMT   |   Update On 2017-04-21 05:43 GMT
சித்ரா பவுர்ணமி தினத்தில் சிறு பிள்ளைகளுக்கு இனிப்பு கொடுத்து, ஆடை தானம் செய்வதுடன், புத்தகங்களையும் வழங்கினால், இந்தப் பிறவியில் நாம் செய்த தீமைகள் விலகும்.
சித்ரா பவுர்ணமி அன்று சித்ரகுப்தனின் படத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டாலும் சரி.. அல்லது காஞ்சீபுரத்தில் உள்ள சித்ரகுப்தனின் ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும் சரி, நம்முடைய பாவக் கணக்குகள் நிவர்த்தியாகிவிடும் என்பது நம்பிக்கை.

மேலும் மறு பிறவி என்பதும் இருக்காது என்கிறார்கள். சித்ரா பவுர்ணமி தினத்தில் சிறு பிள்ளைகளுக்கு இனிப்பு கொடுத்து, ஆடை தானம் செய்வதுடன், புத்தகங்களையும் வழங்கினால், இந்தப் பிறவியில் நாம் செய்த தீமைகள் விலகும். விபத்துகளும், ஆபத்துகளும் நம்மை நெருங்காது.

Similar News