ஆன்மிகம்

துன்பங்களை சிதற வைக்கும் சிதறுகாய்

Published On 2017-04-10 06:51 GMT   |   Update On 2017-04-10 06:51 GMT
வழிபாட்டிற்கென்று தேங்காய் உடைக்கும் பொழுது ஒவ்வொரு விதமாக உடையும் தேங்காய்க்கு ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளது. அவை என்னவென்று பார்க்கலாம்.
வழிபாட்டிற்கென்று தேங்காய் உடைக்கும் பொழுது, சரிபாதியாக உடைந்தால் சிறப்பு உண்டாகும்.

சிறிய மூடியும், பெரிய மூடியுமாக உடைந்தால் சிறிது நாள் கழித்து காரியம் நிறைவேறும். உள்ளே பூ இருந்தால் குழந்தைப்பேறு உண்டாகும்.



குறுக்கில் உடைந்தால் குற்றம் இருக்கிறது என்று பொருள். எக்காரணம் கொண்டும் உடைத்த தேங்காயை பொருத்திப் பார்க்கக்கூடாது.

ஆனால் சிதறுகாய் உடைக்கும் பொழுது நன்றாகச் சிதற வேண்டும். அப்பொழுது சரிசமமாக உடையக் கூடாது. சிறு, சிறு துண்டுகளாகச் சிதறி ஓடினால் தான், நமது துன்பங்களும் சிதறும் என்பது ஐதீகம்.

Similar News