ஆன்மிகம்

தன்னம்பிக்கை, தைரியம் வழங்கும் ஸ்தலங்கள்

Published On 2017-02-10 06:30 GMT   |   Update On 2017-02-10 06:30 GMT
கீழே கொடுக்கப்பட்டு ஆலயங்களை யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
இறைவனுக்கு வீரம் வந்த அட்ட வீரட்ட தலங்கள் உள்ளன. இவற்றிற்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.

திருக்கடையூர் - எமதர்மனை காலால் உதைத்தது.

திருக்கண்டியூர் - பிரம்மனின் தலையைக் கொய்தது.

திருவதிகை - திரிபுரத்தை எரித்தது.

திருவழுவூர் - யானையின் தோலை உரித்தது.

திருப்பறியலூர் - தட்சனை சம்ஹாரம் செய்தது.

திருக்கோவிலூர் - அந்தகாசுரனை வதம் செய்தது.

திருக்குறுக்கை - மன்மதனை எரித்தது.

திருவிற்குடி - ஜலந்தராசுரனை வதம் செய்தது.

Similar News