ஆன்மிகம்

சர்ப்ப தோஷங்களை போக்கும் வேதபுரீஸ்வரர்

Published On 2017-02-03 14:47 IST   |   Update On 2017-02-03 14:47:00 IST
வேதபுரீஸ்வரர் கோவிலில் உள்ள நாகநாத லிங்கத்தை சனிக்கிழமை தோறும் ராகுகாலத்தில் வழிபாடு செய்தால் சர்ப்ப தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ளது வேதபுரீஸ்வரர் கோவில்.

இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்தார். அப்போது பிற மதத்தைச் சேர்ந்த சிலர், வேள்வி ஒன்றை நடத்தி சம்பந்தர் மீது கொடிய பாம்புகளை ஏவிவிட்டனர். சம்பந்தர் இத்தல ஈசனை நினைத்து வேண்டினார்.

உடனே சிவபெருமான், பாம்பாட்டியாக வந்து அந்த பாம்புகளை பிடித்துக் கொண்டு மறைந்துவிட்டார். 11 சர்ப்ப தலைகளுடன் இந்த நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த நாகநாத லிங்கத்தை சனிக்கிழமை தோறும் ராகுகாலத்தில் வழிபாடு செய்தால் சர்ப்ப தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இந்த நாகலிங்கத்தை அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.

சென்னையில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலையில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது செய்யாறு வேதபுரீஸ்வரர் திருத்தலம்.

Similar News