ஆன்மிகம்

பக்தர்களின் மன ஊனத்தையும் விலக்கி அருள்புரியும் அங்குரேஸ்வரர்

Published On 2017-01-17 05:34 GMT   |   Update On 2017-01-17 05:34 GMT
அங்குரேஸ்வரர் கோவில் இறைவன், தன்னை ஆராதிக்கும் பக்தர்களின் மன ஊனத்தையும் விலக்கி அருள்புரிவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
அங்குரேஸ்வரர் கோவில் இறைவன், தன்னை ஆராதிக்கும் பக்தர்களின் மன ஊனத்தையும் விலக்கி அருள்புரிவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

திருச்சி மாவட்டம் லால்குடி - அன்பில் பேருந்து சாலையில், லால்குடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆதிகுடி என்ற திருத்தலம். இங்கு அங்குரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

நம் நடப்பு சந்ததியினர் ஊனம் அடைந்திருந்தால், விபத்தால் அங்க வலிமை இழந்திருந்தால், பக்கவாதம் போல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த ஆலயத்தில் இருக்கும் விமல லிங்கத்தின் வலதுபுறம் நன்றாக திரண்ட வெண்ணெய் காப்பும், இடதுபுறம் வெண்ணெய் காப்பின் மேல் நிறைய மாதுளை முத்துகளைப் பதித்தும் வழிபட்டால் குணம் நிச்சயம் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

மாடு மேய்க்கும் சிறுவன் மேல் கருணை கொண்டு, அவனது பிறவி ஊனத்தை குணமாக்கிய இத்தலத்து இறைவன், தன்னை ஆராதிக்கும் பக்தர்களின் மன ஊனத்தையும் விலக்கி அருள்புரிவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

Similar News