ஆன்மிகம்

செவ்வாய் தோஷத்திற்கு பலன் தரும் எளிய பரிகாரம்

Published On 2017-01-09 07:19 GMT   |   Update On 2017-01-09 07:19 GMT
செவ்வாய் தோஷத்திற்கு விரைவில் பலன் தரக்கூடிய எளிய பரிகாரங்கள் உள்ளன. இந்த பரிகார முறைகளை முறையாக கடைபிடித்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம் என கருதப்படும்.
 
ஆனால், செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட திருமணம் என்றால், அதேபோல் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.
 
பரிகாரங்கள் :

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.

வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை செய்யலாம்.

அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம்.

பழநி ஆண்டவருக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றுதல் நலம்.

Similar News