ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

Published On 2022-06-03 04:35 GMT   |   Update On 2022-06-03 04:35 GMT
விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர்புரத்தில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர்புரத்தில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குத்தந்தை எட்வர்ட் ராயன், பாளை.புனித சவேரியார் கல்லூரி கலைமனைகளின் பொருளாளர் ராய்ஸ் அடிகளார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் இறைமக்கள், புனித அந்தோணியார் நற்பணி மன்றம், இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டனர். விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் இரவு 7 மணிக்கு திருப்பலி நடைபெறும். 5-ந் தேதி தியானம், திருப்பலியை தொடர்ந்து நற்கருணை பவனி நடக்கிறது. 6-ந் தேதி இரவு 9 மணிக்கு புனிதரின் தேர்பவனி, 7-ந் தேதி காலை 9 மணிக்கு கொடி இறக்கம், மதியம் அசன விருந்து நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை புனித அந்தோணியார் நற்பணி மன்றம், ஆலய நிர்வாகிகள், ஜெயராஜ் சுவாமிதாஸ், அந்தோணி மற்றும் நகர்மன்ற உறுப்பினர் ஏசு ராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News