ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
புனித அந்தோணியார் ஆலய ஆண்டு விழா

புனித அந்தோணியார் ஆலய ஆண்டு விழா

Published On 2022-05-26 04:56 GMT   |   Update On 2022-05-26 07:35 GMT
நாகை மாவட்டம் கீழையூரை அடுத்த கருங்கண்ணியில் உள்ள பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகை மாவட்டம் கீழையூரை அடுத்த கருங்கண்ணியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி ஊர்வலம் நடைபெற்றது. ஆலயத்தின் வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

தொடர்ந்து கொடி புனிதம் செய்யப்பட்டு ஆலயத்தின் முன்பகுதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது வாணவேடிக்கை நடைபெற்றது. பின்னர் ஆலயத்தின் உள்ளே மாதாவின் சொரூபத்தில் கிரீடத்தால் முடி சூட்டுவிழா நடைபெற்றது. இதில் தமிழக ஆயர் பேரவை செயலாளர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதில் வேளாங்கண்ணி பேராலய உதவி பங்குதந்தை டேவிட்தன்ராஜ், கருங்கண்ணி பங்கு தந்தை சவரிமுத்து, திருப்பூண்டி பங்குதந்தை ஆரோஆரோக்கியசாமி மற்றும் அந்தோணிபெர்ணாடு, பிரான்சிஸ், விக்டர் பவுல்ராஜ் உள்ளிட்ட திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். விழா நாட்களில் நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை, நற்கருணை ஆசிர், சிறிய தேர்பவனி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார பெரிய தேர்பவனி வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது.
Tags:    

Similar News