ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
புனித உபகார அன்னை ஆலய திருவிழா தேர்பவனி

புனித உபகார அன்னை ஆலய திருவிழா தேர்பவனி

Published On 2022-05-25 03:52 GMT   |   Update On 2022-05-25 03:52 GMT
புனித உபகார அன்னை ஆலய திருவிழாவில் தூத்துக்குடி பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா திருப்பலி மற்றும் உறுதி பூசுதல், தேர்பவனி, நற்கருணை ஆசீர் நடந்தது.
காவல்கிணறு இயேசுவின் திருஇருதய ஆலயம் புனித உபகார அன்னை ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் கொடியேற்றினார்.

ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு திருயாத்திரை, திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடந்தது. 8-ம் திருவிழா அன்று காலை திருப்பலியில் சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு நற்கருணை பவனியும் நடைபெற்றது. 9-ம் திருவிழா அன்று மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர்ப்பவனியும் நடந்தது.

10-ம் திருவிழாவான நேற்று காலை 6 மணிக்கு தூத்துக்குடி பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா திருப்பலி மற்றும் உறுதி பூசுதல், மாலை 3 மணிக்கு தேர்பவனி, 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர் நடந்தது. விழாவில் திரளானவர்கள் பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பங்குதந்தையர்கள் ஆரோக்கிய ராஜ், வினித்ராஜா, பங்கு மேய்ப்பு பணி குழுவினர் மற்றும் அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News