ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
புனித அந்தோணியார்

புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா

Published On 2022-05-19 05:02 GMT   |   Update On 2022-05-19 05:02 GMT
வீரக்குறிச்சி-சுக்கிரன்பட்டி புனித அந்தோணியார் ஆலய விழாவில் வருகிற 24,25 ஆகிய தேதிகளில் இரவு வண்ண வாண வேடிக்கைகளுடன் மின்அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது.
பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சி-சுக்கிரன்பட்டி புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா நேற்று மாலை திருக்கொடி பவனியுடன் தொடங்கியது. தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் கொடியேற்றமும், பின்னர் கூட்டுப்பாடல் திருப்பலியும் நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

விழாவில் வருகிற 24,25 ஆகிய தேதிகளில் இரவு வண்ண வாண வேடிக்கைகளுடன் மின்அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல பங்குத்தந்தை ஜோசப்குழந்தை, வீரக்குறிச்சி-சுக்கிரன்பட்டி கிராம நிர்வாகம் மற்றும் கிராம பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News