ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இயேசு

பிறரை மன்னித்து வாழ்வோம்

Published On 2022-04-21 07:01 GMT   |   Update On 2022-04-21 07:01 GMT
முடிந்த அளவுக்கு பிறரை மன்னித்து அந்த மன்னிப்பு வழியாக இறைவனின் அருள் ஆசிரில் பங்கு பெறுகின்ற உயர்ந்த மனிதர்களாக நாம் மாறுவோம்.
உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பி காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்து கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்து கொள்ளப்பார்த்தால் அவரை தடுக்காதீர்கள்(லூக்6:29)

குற்றம் செய்கின்றவரை இரக்க உணர்வால் பொறுத்துகொள்கின்ற திறனே மன்னிப்பு. மற்றவர்கள் மீது நாம் இரக்கம் கொள்கின்ற பொழுது நாம் மன்னிக்கும் ஆற்றலை உணர்ந்து கொள்கிறோம். உலகத்தில் இயல்பாகவே இன்று எல்லோருக்கும் தவறு இழைத்த மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள். நாம் மன்னிக்கின்ற போது மட்டும் தான் இறைபணியில் பங்கு பெறுகின்றவராக நாம் உருமாறுகிறோம். மன்னிப்பு அளிப்போர், பெறுவோர் ஆகிய இருவருக்கும் அது அருள் ஆசிரை கொண்டு வருகிறது.

மன்னிப்பு முறிந்து போன உறவுகளை அன்போடும் அருள் இரக்கத்தோடும் சீராக்குகிறது. உள்ளத்தை குணமாக்குகிறது.

புகழ்பெற்ற ஒவியர் லியோனாடாவின்ஸ் இயேசுவின் இரவு உணவு சித்திரத்தை வரைந்து கொண்டிருந்தார். அவர் வரைந்து கொண்டிருந்த போது அவருக்கு அங்கு இருந்த ஒரு மனிதர் மேல் அடங்காத கோபம். கோபம் பற்றி எரிந்தது. கடும் சொற்களால் அவரை அசைவாடினார். அவரை வெளியே அனுப்பி விட்டு மீண்டும் அவர் சித்திரம் தீட்டினார். இயேசுவின் முகத்தில் ஒரு மெல்லிய கோடை அவர் வரைய முனைந்தார். ஆனால் அவரால் இயலவில்லை. ஒவியம் வரைவதை விட்டுவிட்டு அந்த மனிதரிடம் சென்று மன்னிப்பு கேட்ட பிறகு தான் அவரால் படம் வரைய முடிந்தது என்று அவர் சொல்கிறார்.

நாமும் பிறரை குறை கூறிக்கொண்டே இருந்தால் பல நேரங்களில் வாழ்வில் வெற்றியடைய முடியாது. நாம் மன்னித்து வாழ்வதற்கு தயாராக இருக்கின்ற பொழுது தான் பல சாதனைகளை நம்மால் இந்த உலகத்தில் படைக்க முடியும். எனவே முடிந்த அளவுக்கு பிறரை மன்னித்து அந்த மன்னிப்பு வழியாக இறைவனின் அருள் ஆசிரில் பங்கு பெறுகின்ற உயர்ந்த மனிதர்களாக நாம் மாறுவோம்.

-அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
Tags:    

Similar News